.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, January 9, 2014

உழவர் திருநாள் ! தமிழர் திருநாள் !


வந்ததுவே! வந்ததுவே! இன்பம்தரும் பொங்கல் ! - நல்ல‌
   வழியதுவும் காட்டிடுமே பிறந்திடும் தைத்திங்கள் !
செந்தமிழர் பண்டிகையாய் சிறந்திடும்இப் பொங்கல் ! - புது
   மங்கலமாய் வாழ்வுதரும் வெற்றிகளும் தருமே !

கதிராலே ஒளிவீசும் கதிரவனும் சாமி ! - அவன்
    கருணைக்குத் தலைவணங்கி நிற்குமிந்த பூமி !
உதிராத மஞ்சளுடன், இஞ்சியதன் கொத்தும் - நல்லக்
    கரும்புடனே செய்திடுவோம் அவனுக்கொரு படையல் !

முப்போகம் செழித்திடவே உழவன்காணும் கனவு ! - அவன்
    உழைப்பாலே நினைவானால், நமக்கெல்லாம் உணவு !
எப்போதும் மாடோடும், ஏரோடும் வயலில் - அவன்
   பாடுபட நமக்கெல்லாம் நிறைந்திடுமே வயிறு !

பருவத்து மாற்றம்போல் மாறும்அவன் வாழ்வும் ! - அவன்
   பயனுக்குத் தொழில்நுட்பம் செய்தளிப்போம் நாமும் !
வருடத்தில் ஒருநாள்தான் அவனுக்கெனத் திருநாள் ! - அவனை
   வணங்கிநன்றி சொல்லிநாமும் பெருமைகொள்வோம் இந்நாள் !

7 comments:

  1. வரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதை நெருடியது... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் ! மிக்க மகிழ்ச்சி !

      Delete
  3. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    ReplyDelete
  4. இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    உறவினர்கள் அனைவருக்கும் ! சிறப்பான கவிதை வரிகளுக்கும்
    என் மனமார்ந்த பாராட்டுக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates