.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, December 8, 2013

மண்டேலா !


ஆப்பிளுக்கும் கருப்புப்பன்னீர் திராட்சைக்கும்
நிறம் வேறு, உரு வேறு, சுவை வேறு !
ஆயினும் இரண்டுமே 'பழம்' தானே !

ஆப்பிரிக்க நாட்டினிலே இதுபோல‌
கருப்பரென சிவப்பரென மனிதரினை
அரசியிலின் ஆயுதத்தால் பிரித்துவைத்தார் !

கொடுமையிதை எதிர்த்துக்குரல் கொடுக்கவொரு
புரட்சிவீரன் போலவந்தார் மண்டேலா...
எழுச்சியுடன் கிளர்ச்சிகளை ஆக்கிடவே !

காரிருளாய் சூழ்ந்தவரின் வாழ்வினிலே
கருப்பரினச் சூரியனாய் ஒளிகொடுக்கத்
தலைவரெனத் தோன்றினாரே மண்டேலா !

சிறுபுத்தி சின்னவரின் சிறுசெயலால்...
சிறைவாசம் கொண்டுபலத் துன்பமுற்றார் !
ஆப்பிரிக்கக் காந்திஅந்த மண்டேலா !


விடுதலையும் பெற்றுத்தந்தார் நாட்டவர்க்கு!
பெருமைதந்தார் அமைதிக்கான நோபலுக்கு !
உலகமக்கள் மனங்கள்ஆண்ட மண்டேலா !

பேரிழப்பே மண்டேலாவின் உயிர்மறைவு !
அவர்கொள்கை கொள்ளவேண்டும் நாம்நினைவு!
மனிதருக்குள் நிறத்தினாலே ஏன்பிரிவு?


3 comments:

  1. மனிதருள் மாணிக்கம்...

    வரிகள் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. காரிருளாய் சூழ்ந்தவரின் வாழ்வினிலே
    கருப்பரினச் சூரியனாய் ஒளிகொடுக்கத்
    தலைவரெனத் தோன்றினாரே மண்டேலா !

    சிறுபுத்தி சின்னவரின் சிறுசெயலால்...
    சிறைவாசம் கொண்டுபலத் துன்பமுற்றார் !
    ஆப்பிரிக்கக் காந்திஅந்த மண்டேலா !//

    ஆழமான கருத்துடைய அற்புதமான வரிகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates