.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 30, 2009

ரஞ்சனி _ குகராம் திருமணத்திற்கு (28‍_ மே _ 2009)

பாடல் 1

மெட்டு: வாடா மாப்பிள்ளை...(படம்: வில்லு)

ராமன் பக்தையாய் நாள்முழுக்க சிரத்தையாய்...
ராம ஜபம் செய்யறாளே !

இது என்ன பக்தியா? வேறேதும் யுக்தியா?
கேக்குறப்போ நாணம் பாத்தியா ?

மாப்பிள்ளைக்கு ...
தொண்ட கட்டாம்...

பொண்ணு இங்கே...
கனைச்சு காட்டுறா !

கை வைத்தியம்...
செய்ய வேண்டி...

தன் மனச...
அனுப்பி வெக்குறா...! (ராமன் பத்தையா)

காதல் சொல்ல பாக்குறா...
கவிதை எழுத பாக்குறா...
இப்பெல்லாம் தனிமையதான்
அதிகம் விரும்பறா...

தனிமையிலே கனவுதான்...
கன‌வினிலே கணவந்தான்...
அப்புறமா வேறுஎன்ன‌
சொல்ல வேணுமா?

எஸ். எம். எஸ்.ஸு...
மெசேஜுல...
ஹார்ட்டு படம்...
அம்பு பாய்க்கிறா! (ராமன் பத்தையா)

அவரு ஃபோட்டோ எடுக்கறா !
கட்ட மீச வரயறா...
கட்டபொம்மன் நென்ச்சுகிட்டு
மனசில் சிரிக்கிறா...

பவரு போசு கொடுக்கிறா !
ஃபோட்டோ எடுத்து அனுப்புறா !
தொலைத்தொடர்பு வசதிக்கெல்லாம்
தேங்க்ஸ் சொல்லுறா!

வீட்டுக்குள்ளே ...
பொய்ய சொல்லி...
ஹோட்டலில மீட்டு பண்ணுறா... (ராமன் பத்தையா)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates