இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்து, மனோ, முத்துவின் தந்தை, சிவா
-----------------------------------
மு.தந்தை: டேய் முத்து ! (கெஞ்சலாக) இதோ பாரு ! முத்து, குளிக்கப் போறான், முத்து குளிக்கப் போறான்-ன்னு நீ என்னவோ கடல்ல இறங்கி முத்து குளிக்கப் போற மாதிரி, நீ குளிக்கறதைப் பார்க்க உங்க சாரு, உன் நண்பன் சிவா, அவனோட அப்பா எல்லாரும் வந்திருக்காங்க...! அவங்களுக்காவது இன்னிக்கு ஒரு நாள் குளிடா...! ப்ளீஸ்...!
முத்து: மாட்டேன்-பா !
மனோ: சார் ! நீங்க இருங்க...! நான் சொல்லி பார்க்கிறேன்...! இதோ பாரு முத்து...! இதுபோல நாலு அஞ்சு நாளா குளிக்காம இருந்தா உடம்புல அரிப்பு, சொறி எல்லாம் வந்து துர் நாற்றம் வரும்...! நீ நல்ல பையனாச்சே ! போ...! போய் குளி...!
மு.தந்தை: என்னடா...சார்-எல்லாம் இருக்காங்க-ன்னு வெட்கப்படறியா?
முத்து: ஆமாம்பா !
சி.தந்தை: வா ! மனோ...! நம்ம போகலாம்...அவனுக்கு ஷை-யா இருக்கு போல...!
(அனைவரும் வெளியேறுகின்றனர்)
மு.தந்தை:: முத்து...! குளிக்கிறியா? முடிஞ்சா குளி..! சரியா...!
முத்து: அப்பா ! நான் உங்ககிட்ட உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்திடிச்சு !
மு.தந்தை: உண்மையா? என்னடா அது...? சொல்லு...சொல்லு...!
முத்து: அப்பா ! ஒரு அஞ்சு நாள் முன்னாடி நான் ஒரு ஜோசியக்காரனைப் பார்த்தேன்...! அவன் சொன்னபடி எனக்கு தண்ணியிலதான் கண்டமாம்...
மு.தந்தை: அப்படியா?
முத்து: அன்னிலேர்ந்துதான் என்பேரு-ல கூட "ஜலம்" இருக்கக்கூடாது-ன்னு, என் பேரை முத்து-ன்னு மாத்திகிட்டேன்...!தாகத்துக்கு இப்போ நான் தண்ணி கூட குடிக்கிறது இல்ல..பன்னீர் சோடாதான் குடிக்கிறேன்...!
மு.தந்தை: அதுக்காக, இந்த வெயில் காலத்துல குளிக்காம இருக்க முடியுமா?
முத்து: என்னப்பா செய்யறது? நான் உயிரோட...
மு.தந்தை:(குறுக்கிட்டு) வேண்டாம்-பா - அத மட்டும் சொல்லாத...நீ நல்லாயிருக்கணும்..அது போதும்... நீ குளிக்கவே வேணாம்...இங்கே வந்துடுப்பா !
(தொடரும்)
பாத்திரங்கள்: முத்து, மனோ, முத்துவின் தந்தை, சிவா
-----------------------------------
மு.தந்தை: டேய் முத்து ! (கெஞ்சலாக) இதோ பாரு ! முத்து, குளிக்கப் போறான், முத்து குளிக்கப் போறான்-ன்னு நீ என்னவோ கடல்ல இறங்கி முத்து குளிக்கப் போற மாதிரி, நீ குளிக்கறதைப் பார்க்க உங்க சாரு, உன் நண்பன் சிவா, அவனோட அப்பா எல்லாரும் வந்திருக்காங்க...! அவங்களுக்காவது இன்னிக்கு ஒரு நாள் குளிடா...! ப்ளீஸ்...!
முத்து: மாட்டேன்-பா !
மனோ: சார் ! நீங்க இருங்க...! நான் சொல்லி பார்க்கிறேன்...! இதோ பாரு முத்து...! இதுபோல நாலு அஞ்சு நாளா குளிக்காம இருந்தா உடம்புல அரிப்பு, சொறி எல்லாம் வந்து துர் நாற்றம் வரும்...! நீ நல்ல பையனாச்சே ! போ...! போய் குளி...!
மு.தந்தை: என்னடா...சார்-எல்லாம் இருக்காங்க-ன்னு வெட்கப்படறியா?
முத்து: ஆமாம்பா !
சி.தந்தை: வா ! மனோ...! நம்ம போகலாம்...அவனுக்கு ஷை-யா இருக்கு போல...!
(அனைவரும் வெளியேறுகின்றனர்)
மு.தந்தை:: முத்து...! குளிக்கிறியா? முடிஞ்சா குளி..! சரியா...!
முத்து: அப்பா ! நான் உங்ககிட்ட உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்திடிச்சு !
மு.தந்தை: உண்மையா? என்னடா அது...? சொல்லு...சொல்லு...!
முத்து: அப்பா ! ஒரு அஞ்சு நாள் முன்னாடி நான் ஒரு ஜோசியக்காரனைப் பார்த்தேன்...! அவன் சொன்னபடி எனக்கு தண்ணியிலதான் கண்டமாம்...
மு.தந்தை: அப்படியா?
முத்து: அன்னிலேர்ந்துதான் என்பேரு-ல கூட "ஜலம்" இருக்கக்கூடாது-ன்னு, என் பேரை முத்து-ன்னு மாத்திகிட்டேன்...!தாகத்துக்கு இப்போ நான் தண்ணி கூட குடிக்கிறது இல்ல..பன்னீர் சோடாதான் குடிக்கிறேன்...!
மு.தந்தை: அதுக்காக, இந்த வெயில் காலத்துல குளிக்காம இருக்க முடியுமா?
முத்து: என்னப்பா செய்யறது? நான் உயிரோட...
மு.தந்தை:(குறுக்கிட்டு) வேண்டாம்-பா - அத மட்டும் சொல்லாத...நீ நல்லாயிருக்கணும்..அது போதும்... நீ குளிக்கவே வேணாம்...இங்கே வந்துடுப்பா !
(தொடரும்)
No comments:
Post a Comment