.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, May 31, 2015

சுமை தாங்கும் மொட்டுக்கள் !

படித்துக் களிக்கின்ற வயதில் - மகனைப்
   பள்ளி அனுப்பாம லேயே ...
கடிந்தே என்னென்ன வேலை - இங்கே
   செய்ய்ச் சொல்கின்றார் பெற்றோர் !

காலை மாலையென இன்றி - தன்
   காலில் ஏதுமணியா சிறுவர்
சாலை ஓரங்களில் கிடந்து - பிறர்
   செருப்பைத் துடைக்கின்றார் பாரீர் !

சிறிய வயிறுதனைப் பேண - இந்த‌
  சிறுவர் படுந்துன்பம் பெரிது !
பெரிய உணவகங்கள் தன்னில் - எச்சில்
   தட்டுகள் அகற்றிடுவார் பாரீர் !

ஓடித் திரிகின்ற பருவம் ! - அதிலே
   ஓய்வே இல்லாமல் தினமும்...
பீடித், தீப்பெட்டித் தொழிலில் - பல‌
   பாடு படுகின்றார் பாரீர் !

எட்டு வயதாக வில்லை ! - உலகம்
   ஏதும் அறியாத பிள்ளை !
மொட்டு மலராத முல்லை - மேலே
   பெரிதாய் சுமத்தலாமோ கல்லை?

நெஞ்சு துடிக்கின்ற தய்யா ! - இவர்
   நிலைமை நினைக்கின்ற போதே !
பிஞ்சு உடம்பெல்லாம் இனியும் - இப்
   பாடு படும்நிலையை ஒழிப்போம் !

பெருமை சேர்த்திடும்நல் கல்வி ! - அதைப்
   பெரிதாய் அவர்கட்குத் தருவோம் !
அருமை செல்வங்கள் சிறுவர் - இதை
   அகத்தோடு நிறுத்தி செயல்படுவோம் !

Saturday, May 16, 2015

கவிஞன் !

உள்ளத்தில் ஊறிவரும் உணர்ச்சிகட்கு...
   உயிரோட்டம் தருபவனே கவிஞன் !
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களை...
     பார்வையுறச் செய்பவனே கவிஞன் !

சிந்தனையாம் பெண்ணவளைக் கைப்பிடிப்பான் !
    சீறிஎழும் புரட்சிமகள் ஈன்றெடுப்பான் !
நிந்தனைக்கு ஒருநாளும் அஞ்சமாட்டான் !
   நித்தநித்தம் கனவுலகில் சஞ்சரிப்பான் !

இறகடித்து இன்பமுற கற்பனையாம்
     எழில்வானில் சஞ்சரித்து இறங்கிவந்து...
சிறக்குமொரு கவிப்பெண்ணை பெற்றெடுப்பான்...
    சீரோடு சமுதாயம் செழிக்கவென்றே !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates