இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: மனோ, சிவாவின் தந்தை,
----------------------------------------------------------------------------------
(சிவாவின் வீட்டு வாசற் கதவ்)
டக்...டக்...டக்
சிவாவின் தந்தை: யாரது?...ஓ..மனோவா...! வாடா...
மனோ: என்னடா ஆச்சு? நேத்து அந்த முத்து குளிச்சானா?
சி.தந்தை: இல்லடா..சிவா சொன்னான்...
மனோ: நான் அப்பவே நெனச்சேன்...!
சி.தந்தை: டேய் மனோ ! அவன் குளிக்கிறான்...குளிக்காம போறான்...நீ ஏன்டா இதுல இன்வால்வ் ஆற?
மனோ: அப்படி கேட்காதடா...! ஒரு ஆசிரியனா, பசங்களோட சுத்தம், சுகாதாரம் எனக்கு ரொம்ப முக்கியம்...நீ கூட நான் வந்த உடனே என்ன கேட்ட? உங்க ஸ்கூல்ல சுத்தம் பத்தி சொல்லித் தர்றதில்லையான்னுதானே !
சி.தந்தை: சரி...ஒத்துக்கிறேன்...இப்ப என்ன செய்யணும்?
மனோ: இது கரெக்ட்...சிவா எங்கே?
சி.தந்தை: அவன் கடைக்குப் போயிருக்கான்...இப்போ வந்திடுவான்...!
மனோ: சரி..சிவா வந்த உடனே அந்த முத்துவை ஒரு ஒன்பது மணி போல ...எப்படியாவது பார்க் பக்கம் அழைச்சிட்டு வரச்சொல்லு...!
சி.தந்தை: ஆஹா..சொல்றேன்...ஆனா எதுக்குன்னு புரியலையே !
மனோ: அவன்கிட்ட இனிமே "குளிடா..குளிடா.."ன்னு கெஞ்சினா வேலைக்கு ஆகாது. நான் ஒரு வாளி தண்ணியோட வந்து அவன் தலையில கொட்டிடலாம்-ன்னு இருக்கேன்...
சி.தந்தை: ஓ,கே...டன்...
(மனோ புறப்படுகிறான்)
காட்சி - 9
இடம்: பூங்கா
முத்து: சிவா..! இப்ப எதுக்குடா என்னை இங்கே வரச் சொன்ன?
சிவா: ஒண்ணிமில்லடா..சும்மா அப்படியே பார்க்-ல காத்து வாங்கிக்கிட்டு அப்படியே பேசலாமுன்னுதான்... (தனக்குள்) மணி ஒன்பது ஆயிடுச்சே...!
முத்து: மணி ஒன்பதா? அதுக்கு என்ன இப்போ?
சிவா: ஒண்ணுமில்லடா..எங்க அப்பா 10 மணிக்குள்ள வீட்டுக்கு வரச் சொன்னாரு...அதான்...
முத்து: சிவா..எனக்கு ஏதோ நடக்கப் போகுது போல இருக்கு...! நான் கிளம்பறேன்...!
சிவா: டேய்..! உட்காருடா !
முத்து: இல்ல...நான் போகணும்..!
சிவா: வெயிட் பண்ணுடா...ப்ளீஸ்...
முத்து: சிவா..! அங்க பாரு...கையில ஒரு வாளியோட..மனோ சாரும், உங்க அப்பாவும் வர்றாங்க...
சிவா: (தனக்குள்) அடப்பாவி...!பார்த்துட்டானே...! சமாளிப்போம்...!
முத்து..அது அவங்க இல்லடா...வேற யாரோ...
முத்து: என்ன விடுடா..நான் போகணும்...(முத்து ஓடத் துவங்குகிறான்)
சிவா: டேய் முத்து...! ஓடாத...நில்லு...நில்லுடா...!
மனோ (அருகில் வந்தவுடன்): என்னடா சிவா..! அந்த முத்து பயல தப்பிக்க விட்டுட்ட...
சிவா: அவன் திருந்தமாட்டான் சார்...! விட்டுடுங்க...!
மனோ: சரி..சரி...நீ வீட்டுக்குப் போ...நானும்...உங்க அப்பாவும் அவனைத் துரத்திகிட்டுப் போறோம்...
சிவா: சரி சார் !
(துரத்துகின்றனர்)\
சிவாவின் தந்தை: மனோ..! எனக்கு மூச்சிறைக்குது...இப்படியே ஓடினா, கொஞ்சம் தூரத்தில ஒரு ஆறு வேற வரும்...நாம எங்கேயாவது அதுல போயி விழுந்திறப் போறோம்...!
மனோ: அதுவும் சரிதான்...நாமத் திரும்பிடலாம்...!
சிவாவின் தந்தை: மனோ ! அங்க பாருடா ! அவன் ஆத்துல விழுந்துட்டான்...!
மனோ: அய்யயோ..! வா..போய் பார்ப்போம்...!
(தொடரும்...)
பாத்திரங்கள்: மனோ, சிவாவின் தந்தை,
----------------------------------------------------------------------------------
(சிவாவின் வீட்டு வாசற் கதவ்)
டக்...டக்...டக்
சிவாவின் தந்தை: யாரது?...ஓ..மனோவா...! வாடா...
மனோ: என்னடா ஆச்சு? நேத்து அந்த முத்து குளிச்சானா?
சி.தந்தை: இல்லடா..சிவா சொன்னான்...
மனோ: நான் அப்பவே நெனச்சேன்...!
சி.தந்தை: டேய் மனோ ! அவன் குளிக்கிறான்...குளிக்காம போறான்...நீ ஏன்டா இதுல இன்வால்வ் ஆற?
மனோ: அப்படி கேட்காதடா...! ஒரு ஆசிரியனா, பசங்களோட சுத்தம், சுகாதாரம் எனக்கு ரொம்ப முக்கியம்...நீ கூட நான் வந்த உடனே என்ன கேட்ட? உங்க ஸ்கூல்ல சுத்தம் பத்தி சொல்லித் தர்றதில்லையான்னுதானே !
சி.தந்தை: சரி...ஒத்துக்கிறேன்...இப்ப என்ன செய்யணும்?
மனோ: இது கரெக்ட்...சிவா எங்கே?
சி.தந்தை: அவன் கடைக்குப் போயிருக்கான்...இப்போ வந்திடுவான்...!
மனோ: சரி..சிவா வந்த உடனே அந்த முத்துவை ஒரு ஒன்பது மணி போல ...எப்படியாவது பார்க் பக்கம் அழைச்சிட்டு வரச்சொல்லு...!
சி.தந்தை: ஆஹா..சொல்றேன்...ஆனா எதுக்குன்னு புரியலையே !
மனோ: அவன்கிட்ட இனிமே "குளிடா..குளிடா.."ன்னு கெஞ்சினா வேலைக்கு ஆகாது. நான் ஒரு வாளி தண்ணியோட வந்து அவன் தலையில கொட்டிடலாம்-ன்னு இருக்கேன்...
சி.தந்தை: ஓ,கே...டன்...
(மனோ புறப்படுகிறான்)
காட்சி - 9
இடம்: பூங்கா
முத்து: சிவா..! இப்ப எதுக்குடா என்னை இங்கே வரச் சொன்ன?
சிவா: ஒண்ணிமில்லடா..சும்மா அப்படியே பார்க்-ல காத்து வாங்கிக்கிட்டு அப்படியே பேசலாமுன்னுதான்... (தனக்குள்) மணி ஒன்பது ஆயிடுச்சே...!
முத்து: மணி ஒன்பதா? அதுக்கு என்ன இப்போ?
சிவா: ஒண்ணுமில்லடா..எங்க அப்பா 10 மணிக்குள்ள வீட்டுக்கு வரச் சொன்னாரு...அதான்...
முத்து: சிவா..எனக்கு ஏதோ நடக்கப் போகுது போல இருக்கு...! நான் கிளம்பறேன்...!
சிவா: டேய்..! உட்காருடா !
முத்து: இல்ல...நான் போகணும்..!
சிவா: வெயிட் பண்ணுடா...ப்ளீஸ்...
முத்து: சிவா..! அங்க பாரு...கையில ஒரு வாளியோட..மனோ சாரும், உங்க அப்பாவும் வர்றாங்க...
சிவா: (தனக்குள்) அடப்பாவி...!பார்த்துட்டானே...! சமாளிப்போம்...!
முத்து..அது அவங்க இல்லடா...வேற யாரோ...
முத்து: என்ன விடுடா..நான் போகணும்...(முத்து ஓடத் துவங்குகிறான்)
சிவா: டேய் முத்து...! ஓடாத...நில்லு...நில்லுடா...!
மனோ (அருகில் வந்தவுடன்): என்னடா சிவா..! அந்த முத்து பயல தப்பிக்க விட்டுட்ட...
சிவா: அவன் திருந்தமாட்டான் சார்...! விட்டுடுங்க...!
மனோ: சரி..சரி...நீ வீட்டுக்குப் போ...நானும்...உங்க அப்பாவும் அவனைத் துரத்திகிட்டுப் போறோம்...
சிவா: சரி சார் !
(துரத்துகின்றனர்)\
சிவாவின் தந்தை: மனோ..! எனக்கு மூச்சிறைக்குது...இப்படியே ஓடினா, கொஞ்சம் தூரத்தில ஒரு ஆறு வேற வரும்...நாம எங்கேயாவது அதுல போயி விழுந்திறப் போறோம்...!
மனோ: அதுவும் சரிதான்...நாமத் திரும்பிடலாம்...!
சிவாவின் தந்தை: மனோ ! அங்க பாருடா ! அவன் ஆத்துல விழுந்துட்டான்...!
மனோ: அய்யயோ..! வா..போய் பார்ப்போம்...!
(தொடரும்...)
அருமை
ReplyDeleteதொடருங்கள்