அதிகாலைப் பொழுது பிறக்கின்ற பொழுது
புதுப் பாடல் உருவாக்கும் மனது - ஒரு
புதுப் பாடல் உருவாக்கும் மனது
(அதிகாலைப் பொழுது)
துயில் நீக்கும் சேவல்தான் கூவி..-புது நாட்கதவைத் திறக்கின்ற சாவி.
நன்னாளை வரவேற்கு கோலம் - நம் நங்கையர் கைகளின் ஜாலம்
விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்
விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்
(அதிகாலைப் பொழுது)
சுப்ரபாதம் இசைத்திடும் கோவில் - முதல் தொழுகைதான் செய்யும் பள்ளிவாயில்
இரு நாதம் ஒரு சேர இன்பம் அது பொங்கிட துள்ளிடும் உள்ளம்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
(அதிகாலைப் பொழுது)
(மறு பதிவு செய்யப்பட்டது).