காட்சி - 6
இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்துவின் தந்தை, சிவாவின் தந்தை, மனோ
-----------------------------------------------------------------------------------------------------
குரல்: முத்து...முத்து...(டக்...டக்.. - கதவு தட்டும் சத்தம்...)
முத்துவின் தந்தை: யாரு? முத்து இல்லையே ! நீங்க யாரு?
மனோ: நான் முத்து படிக்கிற ஸ்கூல்ல டீச்சர்...
மு. தந்தை: ஓ ! அப்படியா...வாங்க...!
சிவாவின் தந்தை: நான் முத்துவோட நண்பன் சிவாவோட அப்பா...!
மு.தந்தை: ஓ ! அப்படியா..! வாங்க...! உட்காருங்க...!என்ன விஷயம்?
மனோ: சார் ! முத்து எங்க போயிருக்கான்?
மு.தந்தை: அவன் எங்கயோ வெளியில போயிருக்கான் சார் !
மனோ: என்ன சார் இது...பையன் காலையில எழுந்து எங்க போறான், என்ன செய்யறான்-னு கவனம் வெச்சுகிறது இல்லையா?
மு.தந்தை: இவனைப் பத்தி எனக்கு இந்த விஷயத்தில கவலை இல்லை சார் ! அவன் ஒரு வெகுளி ! ரொம்ப நல்ல பையன்...!
மனோ: அவன் "வெகுளி"-ன்னு எனக்கும் தெரியும் சார்...அதுக்காக அவனை வெயில் காலத்துல கூட குளி-ன்னு சொல்ல மாட்டீங்களா?
மு.தந்தை: ஓ ! அங்க வர்றீங்களா ! நான் எவ்ளவோ சொல்லி பாத்துட்டேன் சார் ! அவன் கேட்கமாட்டேங்கிறான்...!
எனக்கு ஒரே புள்ள...ரொம்ப செல்லம்..அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா...(உணர்ச்சி வயப்படுகிறார்)
மனோ: ஹலோ..ஹலோ...சார் ! இருங்க..!ரிலாக்ஸ் ! இன்னிக்கு நாட்டுல வளர்ற தீவிரவாத போக்குக்கு இதமாதிரியான பேரண்டிங்கும் ஒரு காரணம்-ன்னு சொல்லுவேன் ...! ஒரே புள்ள..ஒரே பொண்ணு...ன்னு ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி பசங்களுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்க்கிறதுனாலதான், அவங்க தன் இஷ்டத்துக்கு என்னன்னவோ பண்ணி தீவிரவாதியா கூட மாறிடறாங்க...!
மு..தந்தை: சார் ! என்ன சார் இது...! பையன் ஏன் குளிக்க-லன்னு கேட்கலைன்னா தீவிரவாதி ஆயிடுவான்னு புது தியரி சொல்றீங்க?
மனோ: சார் ! உங்க பையன் தீவிரவாதி ஆயிடுவான்னு நான் சாபம் எல்லாம் கொடுக்கல..அவன் நல்லவனா வரணும்ன்னும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் ! நீங்களும் கொஞ்சம் பொறுப்பான அப்பாவா நடந்துக்கங்க...!
மு.தந்தை: உங்க ஆசிக்கும், கரிசனத்துக்கும் ரொம்ப நன்றி சார்...! நாளைக்கு காலையில அவன..நானே...அமுக்கி உட்காரவெச்சு குளிக்க வெச்சிடறேன்...நீங்க என்ன சாப்பிடறீங்க?
மனோ: எதுவும் வேணாம் சார்...அப்ப..நாங்க கிளம்பறோம்...நாளைக்கு காலையில வருவேன் சார்...உங்க பையன் குளிச்சிட்டானான்னு செக் பண்ணுவேன்...
மு.தந்தை: சரி சார் ! கண்டிப்பா வாங்க...!
(தொடரும்...)
இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்துவின் தந்தை, சிவாவின் தந்தை, மனோ
-----------------------------------------------------------------------------------------------------
குரல்: முத்து...முத்து...(டக்...டக்.. - கதவு தட்டும் சத்தம்...)
முத்துவின் தந்தை: யாரு? முத்து இல்லையே ! நீங்க யாரு?
மனோ: நான் முத்து படிக்கிற ஸ்கூல்ல டீச்சர்...
மு. தந்தை: ஓ ! அப்படியா...வாங்க...!
சிவாவின் தந்தை: நான் முத்துவோட நண்பன் சிவாவோட அப்பா...!
மு.தந்தை: ஓ ! அப்படியா..! வாங்க...! உட்காருங்க...!என்ன விஷயம்?
மனோ: சார் ! முத்து எங்க போயிருக்கான்?
மு.தந்தை: அவன் எங்கயோ வெளியில போயிருக்கான் சார் !
மனோ: என்ன சார் இது...பையன் காலையில எழுந்து எங்க போறான், என்ன செய்யறான்-னு கவனம் வெச்சுகிறது இல்லையா?
மு.தந்தை: இவனைப் பத்தி எனக்கு இந்த விஷயத்தில கவலை இல்லை சார் ! அவன் ஒரு வெகுளி ! ரொம்ப நல்ல பையன்...!
மனோ: அவன் "வெகுளி"-ன்னு எனக்கும் தெரியும் சார்...அதுக்காக அவனை வெயில் காலத்துல கூட குளி-ன்னு சொல்ல மாட்டீங்களா?
மு.தந்தை: ஓ ! அங்க வர்றீங்களா ! நான் எவ்ளவோ சொல்லி பாத்துட்டேன் சார் ! அவன் கேட்கமாட்டேங்கிறான்...!
எனக்கு ஒரே புள்ள...ரொம்ப செல்லம்..அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா...(உணர்ச்சி வயப்படுகிறார்)
மனோ: ஹலோ..ஹலோ...சார் ! இருங்க..!ரிலாக்ஸ் ! இன்னிக்கு நாட்டுல வளர்ற தீவிரவாத போக்குக்கு இதமாதிரியான பேரண்டிங்கும் ஒரு காரணம்-ன்னு சொல்லுவேன் ...! ஒரே புள்ள..ஒரே பொண்ணு...ன்னு ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி பசங்களுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்க்கிறதுனாலதான், அவங்க தன் இஷ்டத்துக்கு என்னன்னவோ பண்ணி தீவிரவாதியா கூட மாறிடறாங்க...!
மு..தந்தை: சார் ! என்ன சார் இது...! பையன் ஏன் குளிக்க-லன்னு கேட்கலைன்னா தீவிரவாதி ஆயிடுவான்னு புது தியரி சொல்றீங்க?
மனோ: சார் ! உங்க பையன் தீவிரவாதி ஆயிடுவான்னு நான் சாபம் எல்லாம் கொடுக்கல..அவன் நல்லவனா வரணும்ன்னும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் ! நீங்களும் கொஞ்சம் பொறுப்பான அப்பாவா நடந்துக்கங்க...!
மு.தந்தை: உங்க ஆசிக்கும், கரிசனத்துக்கும் ரொம்ப நன்றி சார்...! நாளைக்கு காலையில அவன..நானே...அமுக்கி உட்காரவெச்சு குளிக்க வெச்சிடறேன்...நீங்க என்ன சாப்பிடறீங்க?
மனோ: எதுவும் வேணாம் சார்...அப்ப..நாங்க கிளம்பறோம்...நாளைக்கு காலையில வருவேன் சார்...உங்க பையன் குளிச்சிட்டானான்னு செக் பண்ணுவேன்...
மு.தந்தை: சரி சார் ! கண்டிப்பா வாங்க...!
(தொடரும்...)
No comments:
Post a Comment