.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, October 4, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 3

பாடல் சூழல்: காதல் தந்த‌ தேவ‌தையை காத‌லன் வ‌ர்ணித்துப்பாடுத‌ல்

ஆடும் ம‌ன‌ ஊஞ்ச‌லிலே யார‌டி கிளியே ! _ விழி
தேடும் அந்த‌ தேவ‌தை யார் கூற‌டி கிளியே !
பூவுல‌க‌ ர‌ம்பையோ இல்லை பூவின‌த்தின் த‌ங்கையோ!
பூத்திருக்கும் தும்பையோ? இல்லை பாத்திருக்கும் கெண்டையோ?
தேன் நிறைந்த‌ பாத்திர‌மோ? தேவ‌லோக‌ சித்திர‌மோ?

(ஆடும் ம‌ன‌ ஊஞ்ச‌லிலே)

சுந்தரி போல் வந்து என்னை வதைத்தது என்ன?
நெஞ்சமதை சிதைத்தது என்ன?

நந்தவனத் தேரு போல நடந்தது என்ன?
சிந்தையதைத் தொடர்ந்தது என்ன?

விந்தைமொழி விழியிரண்டால் சொன்னனது என்ன?
என்னிதயம் நின்னது என்ன?

ச‌ந்த‌முட‌ன் பாட்டு வ‌ர‌க் கார‌ண‌ம் என்ன?
உள்ளுக்குள்ளே தோர‌ண‌ம் என்ன‌?

ஓவிய‌மாய் வ‌ந்து என்னை வ‌லைத்த‌து என்ன‌?
எந்த‌ன் நிலை குலைத்த‌து என்ன? ‍ அவ‌ள் (பூவுல‌க‌ ர‌ம்பையோ)

இன்று வரை இப்படி நான் ஆனதுமில்லை !
புத்திமாறி போனதுமில்லை!

தென்றலைத்தான் தூது செல்ல அழைத்ததும் இல்லை!
பாட்டெடுத்து படித்ததுமில்லை!

என்றும் இந்த உண‌ர்ச்சி கிட்ட எண்ணியதில்லை!
மனசுக்குள்ளே பட்டதுமில்லை!

வென்றுவிடும் காதலென நினைக்கவுமில்லை!
க‌னாக்கூட‌ க‌ண்ட‌துமில்லை!

திருப்ப‌ம் ஒன்று ந‌ட‌க்கும் என்று ஏற்க‌வுமில்லை!
ம‌ன‌ம் எதிர் பார்க்க‌வுமில்லை ‍ அவ‌ள் (பூவுல‌க‌ ர‌ம்பையோ)

Friday, September 12, 2008

என் தம்பி திருமண நிச்சயத்திற்கு...

மெட்டு: என்ன இதுவோ என்னைச் சுற்றியே

சின்னப் பொண்ணுதான் சவுமியாவுக்குப் பின்னால் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் வர மறுக்குது தூக்கம்

நேற்று வரைக்கும் இல்லாதது...
இன்று படுத்தும் பொல்லாத‌து...

ஆம்..வேறு என்ன...புது நாணம் தானடி...(சின்னப் பொண்ணுதான்)

சங்கரா சங்கரா என்று சொல்லத் தோணுதோ..?
பக்தியா இல்லையே...வேறு என்னவோ?

எங்கெங்கு காணினும் சங்கர் பிம்பம் தோணுதோ...
என்னதான் சொல்வதோ..என்ன செய்யவோ?

தொலை..பேசியில்..அழைப்புகள் அதிகமாய் ஆனதுவோ..
உலை பானையின் குமிழிபோல் இதயமும் துடிப்பதுவோ..
கடிகார நேரம் மட்டும்..பைய பைய போகுதோ?

(சின்னப் பொண்ணுதான்)

Tuesday, August 26, 2008

எழுகிறது இந்தியா

அலுவலகக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது 1st Runner Up

அகிம்சை என்கிற ஆயுதம் எடுத்து _ புது
அறவழி சென்று போரினைத் தொடுத்து
'மலர்ச்சி' எழுந்திட பெற்றது சுதந்திரம் ! _ நம்
'எழுச்சி வெல்லும்' என்பதே ம்ந்திரம் !

அறிவியல் துறையில் செயற்கை கோளும் _ பெரும்
ஆய்வியல் துறையில் கண்டுபிடிப் புகளும்..
பொறியியல் துறையில் கணிணியில் வேகம் _ புதுப்
பொலிவுடன் வளரும் பொருளா தாரம் !

கலைத் துறை கல்வி விளையாட் டிலுமே _ ஒரு
சரித்திரம் படைத்திட இளம்படை இருக்கு..
நிமிர்ந்த நன்னடை போட்டென் தோழா _ சொல்
எழுந்தது இந்தியா வல்லர சாகவே..!

Thursday, August 14, 2008

மரம் நடுவோம்

வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...

வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...

மரம் நடுவோம்...மழை பெறுவோம்...
மரம் நடுவோம் இப்போதே...

இன்றே நட்டால்தான்
எதிர்காலம் அப்போதே... (வீட்டுக்கு ஒரு மரம்)

காடுஅது செழித்தால்தான்
நாடுஅது செழித்திடும்

வீடு ஒன்று மரம் ஒன்று
என்ற்கொள்கை வேண்டுமே...

ஏடெடுத்து படிக்கும்புள்ள _
இன்றே வைநீ தென்னம்புள்ள...

தேடவேண்டாம் நாளைநீயும்
செல்வம் ரொம்ப அருகிலே....
(வீட்டுக்கு ஒரு மரம்)

மாரியது பெய்தால்தான்
காரியமே நடந்திடும்!

பாரிதனை உணர்ந்திடவே
காடுபல வேண்டுமே..

பயிர்த் தொழிலே உயிர்த்தொழிலாய்
ஊரெல்லாம் ஏத்துக்கணும்...!

வயிற்றறுப் பசி இல்லயெனும்
நெலமதன்னை காத்துக்கணும்...!

(வீட்டுக்கு ஒரு மரம்)

Friday, August 8, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 2

பாடல் சூழல்: காதல் பிரிவில் சோகம்


அன்பே வா‍_வென்றேன் வந்தாய் _ வந்து
இன்பங்கள் நீ தந்தாய்...(அன்பே)

வேகம் உண்டானபோதே ஒரு சோகம் உண்டாச்சு கண்ணே...
சோகம் உண்டாந்தாலே இந்த நெஞ்சம் ரெண்டாச்சு பெண்ணே !

புனிதமான் நம் காதல் வேள்வியில் தொல்லை வந்தது ஏனடி?
மனித ஜாதிக்கு நமது காதலின் ஆழம் புரியல தானடி...!

முள்ளில் விழுந்தது சேலையே _ அதில்
முள்ளைப் போடுதல் லீலையே !

(அன்பே)

நிலவு வீசும் இந் நேரம்..உன் அன்பன் நெஞ்சில் ஓர் பாரம்..
உலவும் என் நெஞ்சில் என்றும்... நம் நீக்கமில்லாத பந்தம்...

உடலில் தீயைத்தான் வைக்கலாம்...உயிரில் இல்லையடி பைங்கிளி..!!
கடலில் அலைகளும் ஓய்வதில்லையே...உண்மைக் காதலும் சாய்வதில்லையே...
கால நேரங்கள் மாறலாம் _ நம்
காதல் அது போல மாறுமா?

(அன்பே)

Friday, July 25, 2008

சாய‌னாபுர‌ம் அய்ய‌னார் மீது...

ஆவ லோடு நாம வாழும் ஊரு _ இதைக்
காவல் செஞ்சுக் காப்ப துவும் யாரு?
எல்லை யிலே நின்னு ரிப்பார் பாரு ! _ நம்ம‌
தொல்லை தீர்த்துக் காக்கும் அய்ய னாரு!

முன்ன வங்க சாமி சாத்த னாரு _ வீரச்
சின்ன முங்க நம்ம வேம்ப னாரு!
பூர ணாவும் புஷ் கலாவும் கூட _ சேர்ந்து
ஆத ரவா காத்து இருப் பாரு!

மீசை வெச்சு வீரம் காட்டும் சாமி ! _ நம்மேல்
ஆசை வெச்சு பாசம் காட்டும் சாமி !
தீட்டி வெச்ச வீசும் அரி வாளு! _ அதைத்
தூக்கி வெச்சு காவல் செய்யு வாரு !

மடை திறந்த தண்ணி யதைப் போல _ சீறித்
'தடதட' ன்னு பாயும் குதிரை மேல...
சுடலை மாடன் கருப் பண்ணனும் கூட _ வந்து
கவலை யெல்லாம் தீர்த்திடுவார் பாரு!

ப‌டைய‌ல் வெச்சு கும்பி டுவோம் வாங்க‌ ! _ வெற்றி
அடைய னும்னு வேண்டிக் க‌லாம் வாங்க‌!
க‌ன்னுக் குட்டிய‌க் காக்கும் ப‌சு போல‌ _ ந‌மைக்
க‌ண் ம‌ணியாய் காத்தி ருக்கும் சாமி!

Monday, July 14, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 1

பாடல் சூழல்: ஊர்ப் பெரியவரைப் போற்றிப் பாடுவது

பூ மாலை கட்டி போடுங்கடி ! _ புதுப்
பாட்டெடுத்து பாடுங்கடி..!

நம்ம ஊரு காவல்சாமி !
பல்லாண்டு வாழ வாழ்த்துங்கடி!

அம்மன் அருள் வேண்டுங்கடி
அய்யா நலம் போற்றுங்கடி !!

(பூமாலை)

நல்ல உள்ளம் உள்ளவரு!
நாடு போற்றும் நல்லவரு

தப்புகளை தட்டி கேட்கும்
தங்கமான உத்தமரு!

வெல்லம் போல இனியவரு
வெற்றி நாட்டும் புதியவரு...

வள்ளலென வாரித் தரும்
எங்க ஊரு கர்ணரு! _ அவர்
பூமுகத்தில் பூத்திருக்கும்
புன்னகையை பாருங்கடி ! _ பல

கண்ணுபடும் ஓடிவ ந்து
திருஷ்டி சுத்தி போடுங்கடி...!

(பூமாலை)

சிங்க வீரம் கொண்டவரு..!
நம்ம ஊரு ஆண்டவரு!

சங்கத் தமிழ் பேசுகின்ற‌
எங்குலத்து நாயகரு!

மங்காதப் புகழ் உள்ளவரு!
மாணிக்க ந்தான் நல்லவரு!

பொங்கி வரும் வெள்ளம் போல‌
கொள்கை திடம் உள்ளவரு!

சொன்னபடி நட ந்திடுவார் ...
குறைவு இல்லா கண்ணியம்டி!

இ ந்த வீரர் இங்குவர
செய்திருக்கோம் புண்ணியம்டி!

(பூமாலை)

Friday, July 11, 2008

குத்தால‌ம் அருள்மிகு ப‌ரிபூர‌ண‌ வினாய‌க‌ர் அட்ட‌க‌ம்

ராக‌ம்: பூர்விக‌ல்யாணி

பூதலத்து நாயகனே நான்கு
வேதப் பொருள் ஆனவனே _ உன்
அட்ட‌க‌ கீத‌ம் இசைக்கின்றேன் _ இனிய‌
நாத‌மாய் வ‌ருவாய் நீயே


1)

ராக‌ம்: க‌ல்யாணி

நிறைவாழ்வு த‌ந்த‌ருளும்
நில‌ வேந்த‌ன் க‌ண‌ப‌தியே

ம‌றைபொருளாய் ஆகி நிற்கும்
ப‌ரிபூர்ண நாய‌க‌னே

குறைககூறும் குர‌ல்கேட்டு
க‌ற்ப‌க‌மாய்த் த‌ருப‌வ‌னே

சிறைப‌ட்டேன் உன்ன‌ழ‌கில்
சித‌ம்ப‌ர‌த்தான் திரும‌க‌னே

2)

ராக‌ம்: ஹ‌ம்ச‌த்வ‌னி

திரும‌க‌னே திருக்கும‌ர‌ன்
திரும‌ண‌த்தை முடித்த‌வ‌னே

வ‌ருப‌வனே வ‌ர‌ம‌ருள‌
விறைந்திட்டே வாக‌ன‌மேல்

திருமுருக‌ன் மூத்தவ‌னே
திருத்துருத்தி ஆண்ட‌வ‌னே

பேருவ‌கை அடைந்திட்டேன்
பெற்ற‌தெல்லாம் உன்ன‌ருளே

3)

ராக‌ம்: ர‌ஞ்ச‌னி

அருள் பொழியும் மேக‌ம் நீ
அழ‌கு ப‌ரி பூர‌ணனே

பொருள் பெருக்கும் கார‌ணனே
போற்றுகிறேன் காத்திடுவாய்

இருள் நீக்கி ஒளித‌ந்து
இட‌ர்விலக்கும் திருவிளக்கே

பேருள்ள‌ம் கொண்ட‌வ‌னே
பார்காக்கும் வ‌ல்ல‌வ‌னே

4)
ராக‌ம்: கானட‌

வ‌ல்ல‌வ‌னே உன்நாம‌
வ‌ண்மைத‌ன்னை உண‌ர்ந்திட்ட‌

நல்ல‌வ‌ர்க்கே அருள்புரிவாய்
ந‌ன்மைக‌ளைச் செய்திடுவாய்

அல்ல‌ல்க‌ளை அழித்திடுவாய்
அக‌முவ‌ந்து பாடுகிறோம்

வ‌ள்ள‌லேஉன் திருவ‌டிக‌ள்
ந‌ம்பினார்க்குத் துணையாகும்

5)

ராக‌ம்: ஆரபி

துணையாகும் நின் நினைவு
தெளிந்திட்டால் அச்ச‌மில்லை

இணையில்லை வேரொருவ‌ர்
இங்குன‌க்கு முன்நிற்க

வினைத்தீர்க்கும் நாய‌க‌னே
வேழ‌முக‌ வ‌ந்திடுவாய்

உனைக் க‌ண்டேன் எனைம‌ற‌ந்தேன்
உண்மைப‌ரி பூர‌ண‌னே

6)

ராக‌ம்: மோக‌ன‌ம்

ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே
ப‌ண்பு நல‌ன் த‌ருப‌வ‌னே

க‌ரிமுக‌த்து பால‌க‌னே
க‌டைக் க‌ண்ணால் த‌ருப‌வ‌னே

ஹ‌ரிஹ‌ர‌னின் மூத்த‌வ‌னே
அவ‌னிக்கே முத‌ல‌வ‌னே

நெறித‌வ‌றா உன்ன‌ருளே
நிக‌ழ்த்திடுமே அற்புத‌ங்க‌ள்

7)

ராக‌ம்: ம‌லைய‌மாருத‌ம்

அற்புத‌ங்க‌ள் ஆற்றிடுமே
அருள்புரியும் உன்க‌ர‌ங்க‌ள்

பொற்பாதம் பிடித்திட்டேன்
ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே

ந‌ற்க‌தியை த‌ந்திடுவாய்
ந‌ல‌ம‌ருள‌ வ‌ந்திடுவாய்

ஏற்ற‌முற‌ச் செய்திடுவாய்
எங்க‌ள் ம‌ணிபால‌க‌னே

8)

ராக‌ம்: ம‌த்ய‌மாவ‌தி

பாலகனே கணபதியே
பார் போற்றும் பண்டிதனே

நீலகண்டன் மைந்தனே நீ
நிற்கின்றாய் எம்நெஞ்சில்

வேல‌வ‌னின் சோதர‌னே
வேண்டுவ‌ர‌ம் த‌ந்திடுவாய்

ஆல‌ம‌ர‌த் தெய்வ‌மேநீ
அடியார்க்கு அமிழ்த‌ம்தான்

Tuesday, July 8, 2008

என் மனைவிக்காக...

Tune: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் நான்
இப்ப‌டி என் ம‌ன‌ம் துடித்த‌தில்லை
அத்த‌னை பெண்க‌ளில் தேவ‌தையாக‌
நீ ம‌ட்டும் நீ ம‌ட்டும் தெரிந்த‌து ஏன்?

ர‌ம்யா ஓ ர‌ம்யா நீஎன‌க்கே பிற‌ந்த‌வ‌ளா?!
பெண்ணில் ப‌ல‌ பெண்ணில்நீயே சிற‌ந்த‌வ‌ளா?!
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌






(எத்தனை பெண்களைக்)


கருங்காந்த விழிகள்.... அது சொல்லும் மொழிகள்
அதுபோல என் கவியும் இனிக்காது

வருங்காலமெல்லாம் வசந்தம் நம் வாழ்வில்
புது இன்பம் தந்தது யாரு நீதானே

பூவைத் தீண்டும் காற்றாய் வந்தேன்
பூவை உன்னை கண்டு கொண்டேன்

பெரும் புயலாய் வந்தேன்...
தென்ற‌ல் ஆகினேன்..

தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
(எத்தனை பெண்களைக்)

வெயில் காலம் வந்தால் நிழ‌ல் தேடி போவேன்
இனி உந்த‌ன் குழல் தேடி நான் சேர்வேன்
ம‌ழைக் காலம் வந்தால் குடை தேடிப் போவேன்
இனி உந்த‌ன் உடையைத் தேடி நான் சேர்வேன்

மாறிப் போகும் என் வானிலை
மாற்ற‌ம் த‌ந்தாள் என் தேவ‌தை
என் வாழ்வெனும் வானிலே நீ வெண்ணிலா

தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
(எத்தனை பெண்களைக்)

Tuesday, June 3, 2008

ஜனனிக்கு

மெட்டு: ரகசியமானது காதல்

பெருந்தவம் செய்திடல் வேண்டும் – மிக மிகப்
பெருந்தவம் செய்திடல் வேண்டும்
புவியினில் பெண்ணாய் பிறந்திட யாரும்
புவியினில் பெண்ணாய் பிறந்திட யாரும்

(பெருந்தவம் செய்திடல் வேண்டும்)

பெண்ணாகி எங்கள் குல கண்ணாகினாய் –எங்கள்
கண்ணாகி எந்தன் இசையின் பண்ணாகினாய்
கன்னிப் பருவம் நன்றும் தீதும் அறியாதது - கொஞ்சம்
எண்ணிப் பாரென சொன்னால் கூட புரியாதது
தந்தையின் ஆசிகள் உனக்கு – அது எப்பவும் கூடவே இருக்கு

சிந்தையில் இதை நிலை கொண்டு…தினம் வாழ்ந்திடு நீ இங்கு வென்று
(பெருந்தவம் செய்திடல் வேண்டும்)

ஜான்சியின் ராணீ போலே வீறு கொள்ளனும் – எதைச்
செய்தாலும் நீதான் அதிலே வெற்றி காணனும்

அன்னை தங்கை உறவதன் அருமை உண்ர்ந்தேயிரு – அவர்
வாழ்க்கையில் இன்பஙகள் பொங்கிட காரணமாயிரு

ஜகம் புகழ் பெண்மனி ஜனனி – என போற்றிடும் நாள் யெதிர்பார்த்து ஸ்ருதியுடன் வார்த்தைகள் கொண்டு – பாடுகிறேன் ஒரு வாழ்த்து

(பெருந்தவம் செய்திடல் வேண்டும்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates