.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, July 9, 2015

ஷீரடி சாய் நாதம் - எனது புதிய CD !


(For CD Related communications, please email to: psdprasad.music@gmail.com)

அன்புடையீர் !

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர விழைகிறேன். ஷீரடி சாய் பாபா மீது நான் எழுதிய தமிழ் பாடல்கள் அடங்கிய CD (எனது இரண்டாவது முயற்சி)  தற்போது வெளியாகியுள்ளது. 'ரமணா விஷன்' என்னும் நிறுவனத்தின் பெயரில் இது வெளியாகியுள்ளது. இதில், நான் 10 பாடல்களை எழுதியுள்ளேன்.  திரு.உன்னி மேனன், திரு. உன்னி கிருஷ்ணன் அவர்களும் பாடியுள்ளனர்.

இந்த CD, தங்கள் அருகிலுள்ள பாபா ஆலயங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சி.டி.யை வாங்கிக் கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால், அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கமாய் அமையும்...நன்றிகள் ! சாய் ராம் !

Saturday, July 4, 2015

டெலிவரி !

அலுவலகத்தில் கொஞ்சம் டென்ஷனுடனே உலவிக்கொண்டிருந்தான் சஞ்சய்.

"ஹாய் ! சஞ்சய்...இன்னிக்கு ஃபர்ஸ்ட் டெலிவரி-ன்னு கேள்விப் பட்டேன்...! ஆல் தி பெஸ்ட்...! எப்படி போயிட்டிருக்கு?"

"எஸ்...தாங்க் யூ...அல்ரடி அட்மிட்டட்...ஈவ்னிங் 4 மணிக்கு ஆப்பரேஷன்..."

விசாரித்த நண்பன், பெரிதாக சிரித்தான்..."ஓ...! ஹா...ஹா...ஹா...! அது வேறயா? நான் கேட்டது ஆஃபிஸ் ப்ராஜகட் பத்தி-தான்...வீட்லயும் டெலிவரியா....ஹா...ஹா...ஹா...எனி வே...அதுக்கும் என் விஷஸ்..." - சிரித்துக் கொண்டே நகர்ந்தான் கேட்ட நண்பன்...

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் சஞ்சய்.... டீம் லீடராகி இன்று தான் முதல் 'டெலிவரி' அலுவலகத்தில்.... வீட்டிலோ, சிசேரியனுக்காக மாலை 4 மணிக்கு நேரம் குறித்திருந்தார்கள், அவன் மனைவிக்கு....அவள் ஏற்கனவே மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருந்தாள். சஞ்சய்-க்கு முதல் முறை தந்தையாகப் போகும் பரபரப்பு... சந்தித்த நண்பர்களிடம் எல்லாம் மாறி மாறி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...

"என்னப்பா சஞ்சய் ! இன்னிக்கு டெலிவரி-ன்னு சொன்னியே ! என்ன..எல்லாம் ஓகே வா?"

"யெஸ்...யெஸ்...கடைசியா ஒரு தடவை எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிகிட்டு இருக்காங்க..."

"ஓ..! டாக்டர் வந்துட்டாரா? இதெல்லாம் பயப்படாதே ! ரொட்டீந்தான்...ஸ்கேன்..ப்ளட் டெஸ்ட்..."

"அப்சள்யூட்லி இல்லை...சாரி...நீ ஆஃபிஸ் ப்ராஜக்ட் டெலிவரி பத்தி கேட்டியோ-ன்னு நெனச்சுகிட்டேன்...! ஹி...ஹி...ஹி..." - மீண்டும் வழிந்தான்...

"ஹா...ஹா...ஹா... ! கம் ஆன் சஞ்சய்...! இது கிடக்குது...! நானே அந்த டெலிவரி பத்தி கேட்கிறேன்...நீ என்ன...ஒய்ஃபோட- கூட இல்லாம இங்க வந்து டென்ஷனா உக்கார்ந்திருக்க?...வீட்டுக்கு போப்பா...அது தான் முக்கியம்..." - இவனும் சிரித்துக் கொண்டே நகர்ந்தான்...




"என்னடா இது...! காலைலையே ஒரே பல்பா இருக்கு...! ச்சே !" - என்று தனக்குள்ளே நொந்து கொண்டு தனது கேபினுக்குச் சென்றான்.

"ட்ரிங்...ட்ரிங்..." - அவன் நாற்காலியில் அமர்ந்த நேரம், அவனது மேனஜரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது...சஞ்சயின் மேனேஜர், சஞ்சயிடம் மிகவும் நெருக்க மானவர். அலுவலக விஷயங்களை விட சொந்த விஷயங்களை இருவரும் அதிகம் பேசிப் பகிர்வார்கள்...

"ஹாய் சஞ்சய் ! குட் மார்னிங்..ஆல் செட் ஃபார் தி டெலிவரி டுடே?"

சஞ்சய்-க்கு கொஞ்சம் குழப்பமாய் இருந்த்து..."எந்த டெலிவரி பத்தி கேக்கறீங்க-ன்னு?" கேட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான்...பிறகு..."எப்படியிருந்தாலும், இவர் பர்சனல் மேட்டர் தான் கேட்பார்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டு...

"யெஸ் சார்...ஆல் செட்...ஈவ்னிங் 4 ஓ க்ளாக்..."

"வெரி குட்...அவங்க யூ.எஸ்...டைம்...அதனால இன்னும் லேட்டா கூட நாம அனுப்பலாம்...மேக் ஷ்யூர்...யூ கம்ப்ளீட்லி டெஸ்ட் இட்.. ஓகே?"

"ஐயோ ! ஒன் மோர் பல்பா ! நான் 4 மணிக்கு-ன்னு சொன்னது என் மனைவிக்கான டெலிவரி...இவர் கேட்டது..ப்ராஜக்ட் பத்தி போல.." - மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு சமாளித்தான்...

"ஷ்யூர் சார்..வில் டேக் கேர்..."

"தாங்க் யூ...லெட் அஸ் மீட் பை ஃபோர்..."

சற்று தயங்கியவாறே சொன்னான்..."சார்...நான் சொன்னேனே.....வீட்டுல ஒய்ஃப்-க்கு இன்னிக்கு டெலிவரி...3 மணிக்கு கொஞ்சம் நான் ஆஸ்பிட்டல் போயிட்டு, நைட் 7 மணி போல வந்திடறேன் சார்.."

"ஓ....சாரி...நீ சொன்னத மறந்துட்டேன்...டேக் கேர்...! ஆல் தி பெஸ்ட்...!"

அழைப்பு கட் ஆனதும்..."உஃப்...இனிமே யாராவது வந்து கேட்டா...எந்த டெலிவரி பத்தி கேட்கறாங்க-ன்னு கண்டிப்பா கேட்டுக்கணும்...திஸ் ஈஸ் டூ மச்"  என்று நினைத்துக் கொண்டான்...அதே நேரத்தில் அவனது கைபேசி சிணுங்கியது...

"சொல்லுங்க அத்தை..."

"என்னடா டெலிவரி-க்கு ரெடியா?"

"எந்த டெலிவரி...?"

"டேய்..! என்னடா இப்படி கேட்குற? உன் பொண்டாட்டி பிரசவத்துக்காக அட்மிட் ஆயிருக்கா-ன்னு சொன்னியே !" - வெளியூரிலிருந்து பேசிய அத்தை...

"ஓ..! சாரி அத்தை...! நான் இப்ப ஆஃபிஸ்-ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்..அதான்...நானே கூப்பிடறேன்..." - என்று இன்னுமொரு சமாளிப்பு செய்து விட்டு இணைப்பைத் துண்டித்தான்...

"ச்சே ! டெலிவரி டென்ஷன் தாங்கலயே ! இந்த நெலம யாருக்கும் வரக்கூடாதுடா...ஒரே நாள்ல வீட்லயும் டெலிவரி..ஆஃபிஸ்லயும் டெலிவரி...!" - மீண்டும் நொந்துகொண்டான்...

மீண்டும் கை பேசி ஒலித்தது...

"சார் ! குட் மார்னிங்...4 மணிக்கா... டெலிவரி பண்ணனுமா.. சார்?"

"நீங்க யாரு பேசறீங்க-ன்னு சொல்லுங்க முதல்ல..."

"சார் ஆன்லைன்-ல செல் போன் ஆர்டர் பண்ணியிருந்தீங்க இல்ல...அந்த கொரியர் கம்பனியிலேர்ந்து பேசறோம் சார்...உங்க ஆர்டர்ல குறிப்பிட்ட டயத்துக்கு டெலிவரி-ன்னு சொல்லியிருக்கீங்க...பார்சல் வந்திடுச்சு...டெலிவரி பண்ணிடலாமா? 4 மணிக்கு வந்தா போதுமா?"

தன் மனைவிக்காக சர்ப்ரைஸ் கொடுக்க ஆன் லைனில் ஐபோன் ஆர்டர் செய்திருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது...

"இன்னொரு டெலிவரியா" - மனதுக்குள் நினைத்துக் கொண்டே..."3 மணிக்கா வீட்டுல டெலிவரி பண்ணிடுங்க...தாங்க் யூ.." ...

இன்றைக்குத் தனக்கு "டெலிவரி டே" என நினைத்துக் கொண்டு தானே சிரித்துக் கொண்டான்...


Sunday, June 28, 2015

ஆப் பம் சுட்ட கதை!

 
"பாலா பவன் -க்கு போய் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங் ஆப்பம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டது...இப்படி போய் முடியும்ன்னு நெனைக்கவேயில்லை !" - புலம்பினார் பரந்தாமன், தன் நண்பரிடம்...

"என்ன ஆச்சு சார் ! அதுக்கும், இப்ப நீங்க படற அவதிக்கும் என்ன சம்பந்தம்?" - கதையை 'பில்ட் அப்' செய்யும் கேள்வியைத் தொடுத்தார் நண்பர்.

"அத ஏன் கேட்கறீங்க...! ஆப்பம் சாப்பிட்டு வந்த நான் சும்மா இல்லாம...என் சம்சாரத்துக்கிட்ட கேட்டேன்...!"

"என்ன கேட்டீங்க?" - ஏதோ சுவாரஸ்யமான சம்பவம் தொடர இருக்கிறது என்பதை மோப்பம் பிடித்தார் நண்பர்.

----------------

ப்ளாஷ் பேக் (கொசுவர்த்தி காயில் சுற்றுவதாகக் கற்பனை செய்து கொள்ளவும்...)

                                     


----------

பரந்தாமன்: பாலா பவன் ஆப்பம் ரொம்ப நல்லாயிருந்தது இல்ல?

மனைவி: எனக்குகூட புடிச்சுது...ஆனா..இது என்ன பெரிய்ய விஷயம்...நான் கூட வீட்டுலயே செய்வேன்...

பரந்தாமன்: ஒருநாள் செய்யேன் பார்ப்போம்...!

(இரண்டு நாள் கழித்து)

மனைவி: ஏங்க...அமேசான் 'ஆப்' ல ஆப்ப கடாய் வாங்கலாம்ங்க...ஆபர்ல போட்டிருக்கான் !

பரந்தாமன்: இந்த ஆப் எல்லாம் எனக்குத் தெரியாது...நீயே பாத்து வாங்கு...நான் பைசா தர்ரேன்...

மனைவி: நம்ம பையன் மனோகிட்ட சொல்லி அமேசான் ஆப் ல ஆப்ப கடாய் வாங்க சொல்றேன்...

-------
கட் ...கட்...மீண்டும் லைவ்...

-------------
பரந்தாமன் தொடர்ந்தார்...

"மூணாவது நாள் ஆப்ல வாங்கின ஆப்ப கடாய் டெலிவரி ஆச்சு ! பேக்கிங்க பிரிச்சு சம்சாரம் கேட்டா...ஏங்க...இன்னிக்கு ஈவ்னிங் ஆப்பம் செய்யறேன்...சரியான்னு.... நானும் சரின்னு சொல்லிட்டு சாயங்காலம் எப்ப வரும்னு காத்துகிட்டு இருந்தேன்..சாயங்காலமாச்சு...! ஆப்ப கடாயை எடுத்து அடுப்புல வெச்சு...மாவையும் சுத்திவிட்டா...நான் அதுக்குள்ள கிச்சனுக்கு வெளியே இருந்த டைனிங் டேபிள்ல க்ளீன் பண்ணி ரெடி பண்ண ஆரம்பிச்சேன்...டேபிளுக்கு கீழே பேப்பர் குப்பை மாதிரி இருந்துது...அத எடுக்கலாமுன்னு குனிஞ்சேன்..அப்ப என் பின்பக்கம் கிச்சனைப் பாத்து இருந்தது...அதே நேரத்தில கிச்சன் லேர்ந்து ஒரு சத்தம்...ஆ...ன்னு ...நான் நிமிர்ந்து நேராக ஆகறதுக்குள்ள...என் பின் பக்கத்தில (பம்-ல) யாரோ சூடா அடி வெச்ச மாதிரி இருந்தது...நானும் ஆ..ன்னு அலறினேன்...கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு...'என்ன ஆச்சு?'ன்னு கேட்டேன்...என் சம்சாரம் கையை உதறிகிட்டே கிச்சன் லேர்ந்து வெளியே வந்து "என்ன ஆச்சுங்க?'ன்னு என்னைக் கேட்டா...எனக்கு ஒரே எரிச்சல்...நீ என்ன பண்ணினன்னு சொல்லு...ன்னேன்

"கடாய்-ல விட்ட மாவு ஆப்பம் ஆனதுக்கு அப்புறம்..கடாய்லேர்ந்து எடுக்க வரலை..ஆப்பம் வேற கருகிட்டே இருந்துது... ஏதோ நெனப்புல ஒரு கையால புடிச்சுகிட்டு கிண்டிபார்க்கலாம்ன்னு கடாயை கையில தூக்கிட்டேன்...பயங்கர சூடு...அப்படியே கைய உதறி...கடாயை கையிலேர்ந்து வீசி விட்டேன்...உங்க பின்னாடி பட்டுடிச்சு போல..." என்றாள் அப்பாவியாய்...

நண்பருக்கு சிரிப்பு வந்தது...சிரிப்பதா..பரந்தாமனுக்கு ஆறுதல் சொல்வதான்னு தெரியல அவருக்கு...

மனசுக்குள்ளே நெனச்சுகிட்டார்...

"ஆபர்ல  ஆப் ல வாங்கின ஆப்ப கடாய் வெச்ச ஆப்பு...'பம்' - காலி...!

நீங்க என்ன நெனக்கறீங்க? ரெண்டு வார்த்தை எழுதிட்டுப் போலாம் இல்ல?

Saturday, June 27, 2015

ஜோக்ஸ் - பாகம் - 4

"நிலாவில் கால் வைக்கிறேன்னு சொல்லிட்டு எட்டாம் க்ளாஸ் படிக்கிற கதிரவன், அவன் க்ளாஸ்-ல படிக்கிற 'நிலா' ங்கிற பெண்ணை உதைச்சுட்டானாம் !"

"அச்சச்சோ ! அப்புறம் என்னாச்சு?"

"பொண்ணோட அப்பா, 'நான் சூரியன்'-ல கால வெக்கறேன்னு சொல்லி அவனை மிதிச்சு தள்ளிட்டாராம் !"

---------------------------------



"யோகா 'டே' - யையும் கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவையும் அவ்ரு ஒண்ணா கடைபிடிக்கிறாராம் !"

"புரியலையே !"

"யோகா செய்யற போது ஹெல்மெட் மாட்டிக்கிறாரே !"

"!!!!"

------------------------------------



"ஆறாம் க்ளாஸ் படிக்கிற...ஆனா 'போர்டு எக்ஸாம்'ன்னு சொல்ற?"

"டீச்சர் டெஸ்ட் கேள்வியெல்லாம் 'போர்டு'ல எழுதுவாங்க...அதான்...!"

"???"

---------------------

Wednesday, June 24, 2015

இணையத் தமிழே இனி..!

ரூபன் - யாழ்பாவாணன் நடத்திய சித்திரை கவிதைப் போட்டிக்காக எழுதியது:

பன்மொழியின் ஊடகமாம் இணையமது ! - அதில்
    படித்திடவும், பார்த்திடவும்  விடயம்பல...!
நன்மொழியாம் செந்தமிழில் ஆக்கங்களை...- அதில்
    நாடோறும் படைத்திடுவார் கலைஞர்பல...!

ஆங்கிலமே கணிணியதன் மொழியெனவே - இங்கு
    ஆண்டாண்டாய் இருந்தநிலை மாறியதே !
பாங்குடனே செம்மொழியின் ஆர்வலர்கள்... - இங்கு
     பாடுபட்ட முயற்சியதன் திருப்பயனால் !

"யூனிகோடு" என்னும்குறி யீட்டுமுறை... - அது
   யாவருக்கும் பயன்கொடுக்கும் உள்ளீட்டுமுறை !
தேனியுடன் தேன்சுவைக்குப் போட்டியிடும்.. - மறத்
   தமிழர்மொழி இணையம்வர எளியமுறை !

செம்மொழியில் பூக்கும்வலைப் பூக்களென்ன ! - தினம்
   சேர்ந்துவரும் மின்னியலின் நூல்களென்ன...!
எம்மொழிக்கும் எங்கள்மொழி சளைத்ததி(ல்)லை ! - அட..
   எம்மொழிக்கு ஈடுஇணை ஏதுமில்லை!

இணைந்திடுவோம் இணையிலாத தமிழினமே ! - இங்கு
   இன்னும்பல சரித்திரங்கள் படைத்திடவே !
இணையத்தமிழ் இன்னும்புது வேகம்பெறும் - நம்
   சிந்தனையை உலகமெலாம் சேர்த்துவிடும் !

Tuesday, June 23, 2015

எமலோகப் பதவி - நாடகம் - இறுதிக் காட்சி

 காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 6,7 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 8,9 - படிக்க இங்கே சொடுக்கவும்

முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.com



காட்சி - 10                  இடம்: எமலோகம்


சி.கு: எமதர்மராஜனே ! வணக்கம்...! நீங்கள் சொன்னபடி, பட்டியலுடன், அதை வைத்திருந்த இந்த மானுடனையும் அழைத்து வந்து விட்டேன் !

எமன்: ஹா...ஹா...! இவன் தானா அது ! அவன் கையில் என்ன ஒரு சாதனம்?

சி.கு: அது கௌண்டராம் !

தேவ்: அது கௌண்டர் இல்ல...கம்ப்யூட்டர்...நான் இதில எழுதியிருக்கிற ப்ரோக்ராம் வெச்சு என்னென்ன பாவங்கள் செஞ்சா என்னென்ன தண்டணை-ன்னு சொல்லலாம்...

எமன்: ஆஹா..! அப்படியா ! ப்ரமாதம் மானிடா ! உன் பெயர் என்ன?

தேவ்: என் பெயர் தேவதாஸ்...!


படம்: நன்றி: கூகுள்

எமன்: தேவதாஸ்...! நல்ல பெயர்..உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...! இனிமேல் நீதான் என் சித்ரகுப்தன் !

சி.கு: பிரபு ! அப்படியென்றால் என் கதி!?

எமன்: உனக்கு இந்த பதவியிலிருந்து ஓய்வு தருகிறேன் ...! நீ விரும்பினால், இங்கேயே தங்கி அமைதியாக வாழலாம் ! இல்லையென்றால், பூலோகத்தில் மானிடனாகப் பிறக்கலாம் !

சி.கு: எமதர்மனே ! இது அநியாயம்...!

எமன்: (உரக்க) சித்ரகுப்தா !

சி.கு: (திமிராக) சொல்லுங்கள்..!

எமன்: நான் உன்னை அழைக்கவில்லை...! என் புதிய சித்ரகுப்தனை அழைத்தேன்..தேவதாஸ் ! எமனையே எதிர்த்துப் பேசிய இவனுக்கு என்ன தண்டனை என்று, உன் கம்ப்யூட்டரைக் கேட்டு சொல்லு...!

தேவ்: இதோ உங்கள் ஆணை ராஜனே !....ம்...கம்ப்யூட்டர் படி, இவரை இங்கிருந்து கீழே..பூலோகத்திற்குத் தள்ளிவிடவேண்டும் !

எமன்: ஹா...ஹா ! யாரங்கே ! வாருங்கள் ! என்னிடம் திமிர் காட்டிய இவனை கீழே தள்ளுங்கள் !

சி.கு: எமதர்மனே ! கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்...! நான் அழைத்து வந்து மானிடனே ! இது உனக்கே தர்மமா?

எமன்: ம்...இன்னும் என்ன தாமதம்? தள்ளுங்கள் அவனை கீழே !

(சித்ரகுப்தன் கீழே தள்ளப் படுகிறான்...அலறல் சத்தம்...ஆ.....)

தேவ்: எமதர்மனே ! இந்த எமலோகப் பதவி எனக்கு கிடைத்த செய்தியை என் தந்தையிடம் சொல்லவேண்டும். சொல்லிவிட்டு வரவா?

எமன்: ஹா..ஹா...ஹா...! நீ செல்ல வேண்டிய தேவையில்லை...இதோ பார் உன் தந்தையை...! ஹா...ஹா...

தேவ்: அ...அப்பா ! இதோ பாருங்க! எனக்கு வேலை கிடைத்துவிட்டது..!

எமன்: சித்ரகுப்தா...இவர் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை சொல்...

தேவ்: (தயக்கத்துடன்) த..தண்டனையா? எங்க அப்பாவுக்கா ! வேண்டாம்..வேண்டாம்..!

எமன்: என்ன தயக்கம் சித்ரகுப்தா ! பாசம், பந்தம் கொண்டாட இது பூலோகம் இல்லை...உன் வேலையை ஒழுங்காகச் செய்...!

தேவ்: (சமாளிக்கும் முயற்சியில்)...எமதர்மா...கம்ப்யூட்டர் சொல்படி இவரை....வேண்டாம்...எமதர்மா...! எங்க அப்பாவ ஒண்ணும் செய்யவேண்டாம்...வேணும்னா அவருக்கு பதிலா...நான்...எண்ணெய் சட்டியில் வறுபடுகிறேன்..!

எமன்: என்ன இது சித்ரகுப்தா ! உன்னை நம்பி என் பழைய சித்ரகுப்தனையும் தள்ளிவிட்டுவிட்டேனே !...(ஏதோ சத்தம் கேட்க....) ம்...யாரங்கே?

சி.கு: எமதர்மனே ! நான் தான் முன்னாள் சித்ரகுப்தன்...! கீழே தள்ளப்பட்ட நான்...ஒரு வீட்டு மாடியில் உலர்ந்து கொண்டிருந்த படுக்கையில் விழுந்துவிட்டேன் ! அதனால் உயிர் பிழைத்தேன் ! மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன் !

எமன்: தேவதாஸ் ! உனக்கு இன்னும் ஆயுள் முடியவில்லை ! அதனால் நீ மீண்டும் பூலோகம் சென்று வாழலாம். உன் விருப்பத்திற்கு ஏற்ற வேலை கிடைக்கும் !

தேவ்: மிக்க நன்றி ராஜனே !

எமன்: என் முன்னாள் சித்ரகுப்தா...! நீதான் இனி எந்நாளும் என் சித்ரகுப்தன் !

சி.கு: நன்றி ! எமதர்மனே !

எமன்: தேவதாஸ் ...!ம்...நீ போகலாம் !

தேவ்: நான் செல்கிறேன்...! என் அப்பா?

எமன்: அவரோட ஆயுள் முடிந்து விட்டது தேவதாஸ்...நீ மனதைத் தேற்றிக்கொண்டு பூலோகம் செல்...அந்த கம்ப்யூட்டரை இங்கேயே வைத்துவிட்டுப் போ ! எனக்கு பொழுது போகாத நேரத்தில் விளையாடுவேன் !

தேவ்: எமதர்மா ! மன்னிக்க வேண்டும்...! என் அப்பாவும் இல்லாமல், கம்ப்யூட்டரும் இல்லாமல்...பூலோகத்தில் நான் என்ன செய்வேன் ! நான் இங்கேயே இருந்து விடுகிறேனே !

எமன்: ஹா...ஹா..ஹா ! உன் இஷ்டம் தேவதாஸ்..! அப்படியே ஆகட்டும் ! இனிமேல...எனக்கு இரண்டு சித்ரகுப்தர்கள்....! ஹா...ஹா...ஹா...!



                                                         (முற்றும் )


Monday, June 22, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 6,7 - படிக்க இங்கே சொடுக்கவும்


காட்சி-8                      இடம்: தேவதாஸ் வீடு

அப்பா: தேவதாசு ! தேவ்...! எங்கே போனான்..? ஊர் மேயப் போய்ட்டான் போல...ம்...பொறுப்பில்லாத புள்ள...

(வாசலில் சத்தம் - டக்...டக்...)

யாரது...? யாரு...?

குரல்: கதவைத் திறவுங்கள் ஐயா !

அப்பா: அ...அ...நீயா...! அன்னிக்கு தெருவுல ஏதோ தேடிகிட்டு இருந்தாயே ! நீதானே !

சி.கு: ஆம்...நானேதான் ஐயா !

அப்பா: உள்ளே வந்து உட்காருங்க...! என் பையன் கூட உங்கள பார்க்கணும்-னு சொன்னான்...

சி.கு: ஐயா ! நான் தான் சித்ரகுப்தன்...எமலோகத்திலிருந்து வருகிறேன்...!

அப்பா: (திடுக்கிட்டு) என்ன சித்ரகுப்தனா? ஆனா...எனக்கு...இன்னும் ஆயுசு...மு...முடியலையே !

சி,கு: ஹா...ஹா...பதட்டப் படாதீர்கள்...! நான் உங்கள் ஆயுள் முடிக்க வரவில்லை. ஒரு முக்கியமான பட்டியல் தொலைந்துவிட்டது...அதைத் தேடித்தான் வந்தேன்...! அதோ...! ஒரு நவீன சாதனம் இருக்கிறதே ! அதை இயக்குவது யார்?

அப்பா: அதுதான் கம்ப்யூட்டர்....என் பையன் தான் ஆப்ரேட் பண்ணுவான்...அந்தப் பட்டியலும் அவன் கிட்டதான் இருக்கு...ஆனா..அவன ஒண்ணும் செஞ்சுடாதே !

சி.கு: ஹா...ஹா...உங்கள் மகனை நான் பார்க்கவேண்டுமே !

அப்பா: (பரபரப்புடன்) அவன் எங்கே போனான்-னு தெரியல...இதோ தேடிப் பார்க்கிறேன்...!

சி.கு: நல்லது ஐயா !

(அப்பா வெளியே வருகிறார் - தேவதாசும், பாபுவும் ஓடி வருவதைப் பார்க்கிறார்)

அப்பா: என்னாச்சுடா தேவதாசு...இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற...! உன்ன யாராவது எமதூதர்கள் துரத்தறாங்களா?

தேவ்: என்னப்பா ஆச்சு...! இப்படி அபத்தமா கேட்கறீங்க?

அப்பா: சரி...வா...வா...! எமலோலத்திலேர்ந்து உன்னை பார்க்க...சித்ரகுப்தன் வந்திருக்காரு...!

தேவ்: என்னப்பா ஆச்சு உங்களுக்கு ! வந்ததிலேர்ந்து...எமன்...எமலோகம்-ன்னு பேசிகிட்டு...

அப்பா: சரி...நீ உள்ளே வா...!உனக்குப் புரியும் ...!

--------------காட்சி முடிவு-------------------


காட்சி - 9          இடம்: தேவதாஸ் (கம்ப்யூட்டர் மாமா) வீடு

(தேவதாஸ், தன் அப்பாவுடன் தனது வீட்டுக்குள் நுழைகிறான்...சித்ரகுப்தன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறான்)

சி.கு: வாருங்கள் அன்பரே !

தேவ்: யார்யா இது? என் வீட்டுல எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துகிட்டு, என்னையே வா-ன்னு கூப்பிடறது?

சி.கு: நான் தான் சித்ரகுப்தன்...எமலோகத்திலிருந்து வந்துள்ளேன் ! நான் எமலோகத்திலிருந்து தவற விட்ட பட்டியல்...

தேவ்: ஓ ! நீங்கதானா அது ? ! அந்த பட்டியல் என்கிட்டதான் இருக்கு...அதை நான் உங்ககிட்ட கொடுக்கணும்னா - எனக்கு ஒரு உதவி செய்யணும்..

சி.கு: என்ன அது அன்பரே?

தேவ்: ஒரு நல்ல கம்பெனியில் ஒரு நல்ல பதவியில் எனக்கு வேலை கிடைக்க வழி செய்யவேண்டும்...!

சி.கு: பட்டியலோடு, உங்களையும் அழைத்து வரவேண்டும் என்பது ராஜனின் உத்தரவு...!

தேவ்: எ....என்னது? நானும் வரணுமா?

சி.:கு: பதட்டமோ, பயமோ வேண்டாம் அன்பரே !

தேவ்: பயமா? நான்...ப...பயப்படலாம் இல்ல..

சி.கு: அப்ப வேறு என்ன? வாருங்கள் போகலாம்...!

அப்பா: டேய் ! தேவதாஸ் ! என்னை அனாதையா விட்டுட்டுப் போயிடாதடா !

தேவ்: அப்பா ! நீங்கதான எனக்கு இந்த ஜென்மத்தில வேலை கிடைக்காது-ன்னு சொன்னீங்க..எனக்கு அடுத்த ஜென்மத்திலயாவது வேலை கிடைக்கட்டும்...! சித்ரகுப்தரே ! பிடியுங்கள் பட்டியலை...புறப்படுங்கள்...! என் கம்ப்யூட்டரையும் எடுத்துக் கொள்கிறேன்....எனக்குப் பொழுது போகும்..!

அப்பா: தேவதாசு...தேவா...தே...! (மார்பை பிடித்துக் கொண்டு விழுகிறார் - தேவதாசும், சித்ரகுப்தனும், கம்ப்யூட்டருடன் புறப்பட்டுவிட்டார்கள்)

----------காட்சி முடிவு-------------------(முடிவு என்ன என்பதை அறிய நாளை வரைக் காத்திருக்கவும்....தொடரும்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates