காட்சி - 2
இடம்: ஒரு பூங்கா
பாத்திரங்கள்: முத்து, நண்பன் சிவா
-------------
முத்து: டேய் சிவா ! என்னடா இது ! மாட்ச் - பார்க்கப் போகாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?
சிவா: சும்மாதான்டா ! வீட்டுல கரண்ட் இல்ல...! அதான் இங்க வந்து காத்து வாங்கலாமுன்னு...இங்க பாரு...இந்த பார்க்க-ல இருக்கிற பூவெல்லாம் என்ன வாசனை பாரு...!
(முத்து அருகில் வருகிறான்)
சிவா: டேய் ! என்னடா இது ! திடும்-ன்னு ஒரே நாத்தமாயிருக்கு !
முத்து: ம்...எனக்கு ஒண்ணும் தெரியல...!
சிவா: ம்...எனக்குத் தெரிஞ்சுபோச்சு ! வெற்றிகரமா 4-வது நாளா இன்னிக்கும் நீ குளிக்கல...! அதானே ?
முத்து: போடா டேய் !
சிவா : ஏன்டா முத்து ! இப்படி புழுக்கத்துல உன்னால எப்படிடா குளிக்காம இருக்க முடியுது?
முத்து: சிவா ! நான் உயிரோடு இருக்கனும்னா, என்னால குளிக்க முடியாது...
சிவா: குளிச்சா செத்து போயிடுவ-ன்னு உனக்கு யார்-டா சொன்னா?
முத்து: சிவா...தேவையில்லாம ஏதேதோ கேட்காத...நான் கிளம்பறேன்...!
சிவா: உன்னோட இந்த பழக்கத்தினாலேயே உன்னோட நண்பர்கள் எல்லாம் உன்னை விட்டு போகப்போறாங்க பாரு !
முத்து: அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லடா ! முதல்ல நான் உயிரோட இருக்கணும் ...! அத விடு...நான் இப்போ மேட்சுக்குப் போறேன்...நீ வர்றியா இல்லையா?
சிவா: இல்லடா..! நான் வரலே ! வீட்டுக்குப் போகணும் !
முத்து: சரிடா ! நான் கிளம்பறேன்...பாக்கலாம்...
(செல்கிறான்)
சிவா: (மனசுக்குள்) ச்சே ! இவனத் திருத்தவே முடியாது போலிருக்கு ! ஆனாலும் நல்ல பையன்...இவன பத்தி நம்ம அப்பாகிட்ட பேசிப்பார்ப்போம் ...!
இடம்: ஒரு பூங்கா
பாத்திரங்கள்: முத்து, நண்பன் சிவா
-------------
முத்து: டேய் சிவா ! என்னடா இது ! மாட்ச் - பார்க்கப் போகாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?
சிவா: சும்மாதான்டா ! வீட்டுல கரண்ட் இல்ல...! அதான் இங்க வந்து காத்து வாங்கலாமுன்னு...இங்க பாரு...இந்த பார்க்க-ல இருக்கிற பூவெல்லாம் என்ன வாசனை பாரு...!
(முத்து அருகில் வருகிறான்)
சிவா: டேய் ! என்னடா இது ! திடும்-ன்னு ஒரே நாத்தமாயிருக்கு !
முத்து: ம்...எனக்கு ஒண்ணும் தெரியல...!
சிவா: ம்...எனக்குத் தெரிஞ்சுபோச்சு ! வெற்றிகரமா 4-வது நாளா இன்னிக்கும் நீ குளிக்கல...! அதானே ?
முத்து: போடா டேய் !
சிவா : ஏன்டா முத்து ! இப்படி புழுக்கத்துல உன்னால எப்படிடா குளிக்காம இருக்க முடியுது?
முத்து: சிவா ! நான் உயிரோடு இருக்கனும்னா, என்னால குளிக்க முடியாது...
சிவா: குளிச்சா செத்து போயிடுவ-ன்னு உனக்கு யார்-டா சொன்னா?
முத்து: சிவா...தேவையில்லாம ஏதேதோ கேட்காத...நான் கிளம்பறேன்...!
சிவா: உன்னோட இந்த பழக்கத்தினாலேயே உன்னோட நண்பர்கள் எல்லாம் உன்னை விட்டு போகப்போறாங்க பாரு !
முத்து: அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லடா ! முதல்ல நான் உயிரோட இருக்கணும் ...! அத விடு...நான் இப்போ மேட்சுக்குப் போறேன்...நீ வர்றியா இல்லையா?
சிவா: இல்லடா..! நான் வரலே ! வீட்டுக்குப் போகணும் !
முத்து: சரிடா ! நான் கிளம்பறேன்...பாக்கலாம்...
(செல்கிறான்)
சிவா: (மனசுக்குள்) ச்சே ! இவனத் திருத்தவே முடியாது போலிருக்கு ! ஆனாலும் நல்ல பையன்...இவன பத்தி நம்ம அப்பாகிட்ட பேசிப்பார்ப்போம் ...!
தொடர்கிறேன்
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html