கணிணியிலே தமிழ்மொழியின் கொடியதனை ஏற்று !
கதை, கவிதை காவியங்கள் செம்மொழியில் ஆக்கு !
மணித்துளியில் பணிமுடிக்கும் எளிமையினை இங்கு...
மனிதஇனம் முழுவதற்கும் செந்தமிழில் வழங்கு !
மாசுபடும் சூழலினால் மண்ணுக்கிலை நன்மை !
மாசுபட்ட மனம்கழுவி உணர்ந்திடுவாய் உண்மை !
ஏசிடுமே நாளையநாள் சந்ததிகள் உன்னை !
சுத்தமான சூழலில்லை வாழ்வதற்கு என்றே !
பெண்களெலாம் நாட்டின்இரு கண்களென ஆவார்!
பெருந்துயரை நீகொடுக்க மனமுடைந்து நோவார் !
கண்கள்அதை குத்திவிடும் கொடுஞ்செயலை செய்து...
குருடன்என வழியறியா அலைந்திடுதல் ஏனோ?
இப்படித்தான் வாழ்திடணும் இவ்வுலகில் என்று...
முன்னவர்கள் சொல்லிவைத்தார் நன்முறைகள் அன்று !
எப்படியும் வாழ்ந்திடுவேன் வாழ்வெனது என்று...
கண்டவழி செல்லுகிறாய் பண்பாடதனை மறந்து...!
விழித்தெழுவாய் ! இலக்கடையும் பாதையது தூரம்!
சுழலுகின்ற காலம்அது காட்டுதிங்கே வேகம் !
வழித்தவறி இலக்குஇன்றி செல்லுவதும் எங்கே?
சிந்தனைக்கு உணவளித்து திரும்பிடணும் இங்கே !
உறுதிமொழி:
1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்
2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
vaalthukal.
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteதாங்களும் விமர்சனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்