.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, March 13, 2015

ரூபனின் தைப் பொங்கல் சிறுகதைப் போட்டி - 2015-ல் பரிசு !

தமிழ் வலைப்பதிவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நண்பர் ரூபன் அவர்கள் குழுவுடன் நடத்திய பொங்கல் சிறுகதைப் போட்டியில், எனது சிறுகதை ஆறுதல் பரிசை வென்றுள்ளது.

சிறுகதையைப் படிக்க...

http://psdprasad-tamil.blogspot.com/2015/03/lifechangingfestival.html


வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்...!போட்டி முடிவுகளுக்கான ரூபனின் பதிவு கீழே !

http://www.trtamilkkavithaikal.com/2015/03/2015.html

Story Contest Winner

Thursday, March 5, 2015

ஜோக்கு(?!)

இவன்:  ரகு ! என் ஃபுட்பால் கோச், முடியே வெட்ட மாட்டார் போல...அவ்வளவு முடி !
அவன்: அப்ப அவரு கோச் சடையான்-னு சொல்லு !
இவன்: ஹா ! ஹா ! ஹா !


_______________________________________________________________

"அதோ போறாரே...அவரு, படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கிறவங்ககிட்ட‌ வேலை வாங்கித் தருவதா சொல்லி, நிறைய பணம் வாங்கிகிட்டு நாமம் போட்டுட்டடாராம்!"

"அப்ப அவரு ஒரு 'பட்டை போடும் வேலைதாரி !'-ன்னு சொல்லுங்க !"

_______________________________________________________________


"சங்கீத வித்வானா இருந்த சோமசுந்தரம் அரசியல்ல குதிச்சிட்டாராமே !"

"தோடி ராகம் பாடிகிட்டு இருந்தவரு, இனிமே மோடி ராகம் பாடுவார்-ன்னு சொல்லுங்க !"

_______________________________________________________________

 "ஒரு வருஷம் முன்னாடி ஒரு தடவ தற்கொலை செங்சுக்கலாமுன்னு  10 ரூபாய்க்கு விஷம் வாங்கினேன். இப்ப போயி அதையே வாங்கப் போனா 35  ரூபாய்ன்னு சொல்றான் !"

"விலைவாசி விஷம் மாதிரி ஏறுதுன்னு புரிஞ்சுகிட்டீங்களா?"

_______________________________________________________________


Sunday, January 25, 2015

தூய்மையைப் போற்றுவோம் !

சுத்தமே உணவினைப் போடும்...
  என்றொரு பழமொழி சொன்னார் !
நித்தமும் அதன்படி நடக்க...
   நினைக்கவும் மறந்தே போனார் !

வீதியின் நெரிசல் நடுவில்...
   குப்பையின் உண்டியல் இருக்கும் !
பாதிமேல் குப்பைகள் அதனை
   சுற்றிதான் பரவியேக் கிடக்கும் !

புகைவண்டி  பயணம் போவார் !
   பொழுதினைக் கழிக்கவேத் தின்பார் !
புகைஊதி சிலரும் போவார் !
   குப்பையை வண்டியில் விடுவார் !

இதம்தரும் காற்றைத் தேடி...
   கடற்கரை பக்கம் போவார் !
தடம்பதி மண்ணின் அழகை..
  குப்பையால் தானே மறைப்பார் !

சாலையில் செல்லும் போது...
  எங்கிலும் உழிழ்ந்தே போவார் !
வேலைக்கு செல்வோர் எல்லாம்
  பயந்துதான் ஓரம் போவார் !

சுற்றிலும் சூழ்ந்திடும் குப்பை
   புதுப்புது நோயுண் டாக்கும் !
சுத்தமே சுகங்கள் சேர்க்கும் !
   சற்றுநாம் தெளிந்திட வேண்டும் !

குப்பையை இடுவோர் தானே
   சுத்தமும் செய்திட வேண்டும் !
தப்பினை உணரவும் வேண்டும் !
   தூய்மையைப் போற்றிட வேண்டும் !

Sunday, January 4, 2015

மானுடம் வாழ்க !

செயற்கை கோளென்ன ! சந்திரனில் காலென்ன?
   சாதிக்கப் பிறந்தவனே மனிதா !
இயற்கை விதியான 'அனைவரும் சமன்' என்ற‌
   உண்மை மறந்ததவும் ஏனோ?

அரக்கன் 'சாதி'யினை ஆளாக்கி வைத்தாயே !
   அவனுன்னை ஆள்வானே இன்று !
இரக்கம் இல்லாமல் வெறியாட்டம் ஆடிஅவன்...
      உந்தன் இனமழித்தல் நன்றோ?

மதத்தின் பெயர்சொல்லி மதம்கொண்ட யானைபோல்..
   மூர்க்க நடமாடும் மனிதா !
சகத்தில் ஒருமதமே ! 'மானுடமே' அதன்பேராம்...
    வேறு ஒன்றில்லை அறிவாய் !

இரத்தம் நிறமிங்கு ஒன்றாகும் எல்லோர்க்கும்...
     ஏற்றத் தாழ்வதிலே உண்டோ?
சத்தம் போட்டிங்கு ஒன்றாகச் சொல்லிடுவோம்..
     'வாழ்க மானுடமே' என்றே !

Wednesday, December 31, 2014

2015

 HAPPY 2015 !

மாயம் ஆகாத விமானம் வேண்டும் !
காயம் படாத கிரிக்கெட் வேண்டும் !

குண்டு வெடிக்காத காஷ்மீர் வேண்டும் !
"Gaaண்டு" கொள்ளாத neighbours வேண்டும் !

ஏற்றம் இல்லாத விலைகள் வேண்டும் !
சீற்றம் இல்லாத அலைகள் வேண்டும் !

Wi-fi காற்றோடு கலந்துவர வேண்டும் !
Selfie எடுத்திடவே மூணாம்கை வேண்டும் !

 -------------------
என் BLOG-க்குத் தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் !

Sunday, December 21, 2014

மனம் மயக்கும் மார்கழி !

துயில் நீக்கும் கோவிலிலே சுப்ரபாதம் ! - பனித்
  துளிதூங்கும் இலைதாங்கும் பூந்தோட்டம் !
குயில் குரல்கள் கச்சேரி களைகட்டும் ! - சிறு
  குளிர்தோன்றி சில்லெனவே மெய்சிலிர்க்கும் !

சின்ன  இடை வஞ்சியரின் கைஜாலம் ! - பல‌
   வண்ணத்திலே வாசலிலே மாக்கோலம் !
சின்ன தாக பூசணிப்பூ புன்சிரிக்கும் ! - நமை
  மெள்ளதாக வீட்டுக்குள்ளே தானழைக்கும் !

மாதம் தனில் மார்கழியே மனமயக்கும் ! - புது
  வசந்தம்போல் இன்பமதை தான்சேர்க்கும் !
கீதம் அதுநாதமுடன் காற்றில்வரும்  !- தைப்
   பண்டிகைக்குத் தந்திடுமே முன்னோட்டம் !




Saturday, November 8, 2014

இடி !

வானிலை அறிக்கை கேட்டேன் !
   வருகுது பெரும்புயல் என்றார் !
நீர்நிலை மட்டம் எல்லாம்...
   உயர்ந்திடும் என்றும் சொன்னார் !

கடும் மழை புயலிலெல்லாம்..
    குழந்தையர் சிக்கா திருக்க....
"விடுமுறை பள்ளிகள்" என்று...
   இன்னொரு சேதியும் சொன்னார் !

தூரல்கள் அங்கும் இங்கும்...
   ஓரிரு எண்ணியேத் தூர...
பேரிடி, காற்றும் இன்றி...
    பொய்த்தது வானிலை அறிக்கை !

அடுத்தநாள் புயலைப் பற்றி...
   பெரியதாய் அறிக்கை இல்லை..
கடுப்பிலே இருந்தவன் போல...
   கதிரவன் கொதித்தே மேய்ந்தான் !

பள்ளியில் நடந்த தென்று
   'பகீர்'எனும் செய்தி ஒன்றை...
சொல்லிடக் கேட் டதிர்ந்தேன் !
   என்சொலக் கொடுமை தன்னை !

நாலிரு வயதேஆன...
    பூத்திடா பூவின் மொட்டை
பாலியல் கொடுமை செய்தான்!
   போதனை செய்யும் ஆசான் !

நேற்றைய வானிலை அறிக்கை...
   இன்றுதான் பலித்தது போல...
கீற்றென மின்னலும் இடியும்...
    குழந்தையின் வாழ்வில் இன்று !

சிறுவரை பாலியல் கொடுமை
   செய்துசீர் அழிக்கும் இந்த...
சிறுசெயல் தன்னை ஒழிப்போம் !
   சிந்தனை நல்லது கொள்வோம் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates