.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, August 1, 2014

தித்திக்குதே !

இனிப்புதான் மிகவும் பிடிக்கும்
   என்றதை உண்டே வந்தால்...
இனிப்பதே உன்னைப் பிடிக்கும்
    சர்க்கரை நோயின் மூலம் !

ஜாங்கிரி, கேசரி என்று
    இனிப்புகள் பெயரைக் கேட்டால்
பொங்கிடும் நீரூற் றெனவே
     ஊறிடும் உள்நாக் கினிலே !

ஒன்றுதான் இரண்டுதா னென்று
    ஒவ்வொரு முறையும் இங்கே...
உண்டுநீ வந்தால் போதும்...
  'சர்'ரென சர்க்கரை ஏறும் !

யாருமே பார்க்கா நேரம்
   வாயினில் தினிக்கத் தோணும் !
கூறுமே உண்மையை இங்கே
   நேர்ந்திடும் உடல்மாற் றங்கள் !

வீட்டிலே உள்ளவர் எல்லாம்
    வாய்த்ததோர் வாய்ப்பு என்றே
சூட்டிலே பொசுக்கிய சொல்லால்
     'கரிசனம்' காட்டியே செல்வார் !

நாவினை அடக்கியே நாளும்
   வித்தையை அறிந்திட வேண்டும் !
தீவினை சர்க்கரை நோயாய்
   மேவிடும் முன்பே நாமும் !

Saturday, July 26, 2014

அழகான அதிகாலை !


அதிகாலைப் பொழுது பிறக்கின்ற பொழுது
புதுப் பாடல் உருவாக்கும் மனது - ஒரு
புதுப் பாடல் உருவாக்கும் மனது

(அதிகாலைப் பொழுது)

துயில் நீக்கும் சேவல்தான் கூவி..-புது நாட்கதவைத் திறக்கின்ற சாவி.
ந‌ன்னாளை வரவேற்கு கோலம் - நம் நங்கையர் கைகளின் ஜாலம்

விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்

விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்

(அதிகாலைப் பொழுது)

சுப்ரபாதம் இசைத்திடும் கோவில் - முதல் தொழுகைதான் செய்யும் பள்ளிவாயில்
இரு நாதம் ஒரு சேர இன்பம் அது பொங்கிட துள்ளிடும் உள்ளம்

நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்

(அதிகாலைப் பொழுது)

(மறு பதிவு செய்யப்பட்டது).

Saturday, July 19, 2014

Facebook Friends !

"ராக்கெட் ராஜா", "we are bad bad bad boys" போன்ற திரைப் பட பாடல்கள் வரிசையில் FACEBOOK -கை வைத்து திரைப்பாடல் வந்தால் எப்படி இருக்கலாம் என்று ஒரு முயற்சி..
========================================================================

Facebook-ல UPDATE போட்டு....
Friends சேர்த்துக் கொள்வோம் !
Face-to-Face நாங்க பாக்கலனாலும்
ரொம்ப LIKE செய்வோம் !

அடுத்தவன் PHOTO...UPLOAD செஞ்சா
அதுக்கு கமண்ட்டு அடிப்போம் !

Facebook Friends ! நாங்க Facebook Friends !

--------------------

LOL எழுதி நாங்க மனசுக்குள்ள சிரிப்போம் !
லொள்ளு, டில்லி அரசியல்லு எல்லாம் share செய்வோம் !

டல்லாத் தோணும் STATUS UPDATE ஏதும் போடலேனா !
பில்லா ரங்கா ரேஞ்சுக்கு SCENE  ஏதும் காட்டலேனா !

ஒத்தக் காலில் நிக்கும் கொக்கு...
மீனின் வரவ பாத்து...

SELFIE போட்டு ஆவலாய் இருப்போம்
LIKE வருதா பாத்து...

Facebook Friends ! நாங்க Facebook Friends !

---------------

வேறொரு SITE-டில் படிச்சத எங்க படைப்புபோல விடுவோம் !
பிரச்சனை வந்தா அவருக்குக் கூட FRIENDS REQUEST தருவோம் !

கடலைத் தாண்டி MESSENGER வழியா கடல போட்டுஇருப்போம் !
விடலைப் பருவ MATTER  எல்லாம் விவரமாக ரசிப்போம் !

கெடச்சத கரைஞ்சு சாப்பிடும் காக்கா...
கூட்ட மாகக் கூடி...

கெடச்சத SHARE பண்ணி கமண்ட் அடிப்போமே
நாங்க அதுல கேடி

Facebook Friends ! நாங்க Facebook Friends !

Friday, July 11, 2014

அருணோதயம் ஆகின்றது ! - பாடல்

"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான  CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை திரு ராகுல் அவர்கள் பாடியிருக்கிறார்கள். நான் எழுதி, மெட்டமைத்திருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !

https://soundcloud.com/psdp1/arunodhayam

பாடலுக்கான வரிகளை எனது  முந்தைய பதிவொன்றில் காணலாம்.

Saturday, June 21, 2014

ஷீரடி சாய் பாபா பாடல் - கேட்க கேட்க மெய் சிலிர்க்கும்

"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான  CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை நானே எழுதி, மெட்டமைத்து, பாடியிருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !

https://soundcloud.com/psdp1/ketka-ketka-sarvam-sai-mayam

பாடல் வரிகள் கீழே:
-----------------------------

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா ! குரு சாயி லீலா !

ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல !
ஓராயிரம் லீலை !

ஒன்றோ ரெண்டோ சொன்னால்கூட‌
நெஞ்சில் பூத்திடும் சோலை !

(கேட்க கேட்க )

ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் !
ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் !
எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது !
இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது !

(கேட்க கேட்க )

கைத் தவறி கைக்குழந்தை தீயில் விழ !
கைக் கொடுப்பாய் என்று அந்தத் தாயும் அழ !
எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது !
இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது !

(கேட்க கேட்க )

மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணையில்லை !
என்றுசொன்ன வணிகர்சொல்லில் உண்மையில்லை !
தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் !
கண்ணீரிலே அவர் உருக மாற்றிக்காட்டினார் !

(கேட்க கேட்க )


Saturday, June 14, 2014

சிறுவரைப் பணி அமர்த்தல் தகுமோ?

பச்சிலம் பாலகனை, பள்ளிக்கு அனுப்பாமல்
எச்சில் இலை எடுக்க வைத்திடுதல் அதுதகுமோ?

நன்றாய்உருவாகி நாளைக்கு நாடாளும்
பொன்னான கைகளிலே கல்சுமத்தல் அதுதகுமோ?

பாடி,விளையாடிப் பயிலுகின்ற பருவத்தில்
பீடி, தீப்பெட்டி தொடச்செய்தல் அதுதகுமோ?

கல்வியது அவன் உரிமை, கற்பித்தல் நம் கடமை !
செல்வமெலாம் சேர்ந்த்து வரும் கல்வியதன் பின்னாலே !

சிறுவர் பணி அமர்த்தும் சிறுசெயலை நிறுத்திடுவோம் !
வருமோர் காலமதில் அவர்வெல்ல உதவிடுவோம் !

Saturday, May 10, 2014

கவிதைப் பிரசவம் !

கதையும் விதையும் கருவாகி
   கருத்துடன் வார்த்தைகள் உருவாகி
சதையும் எலும்பும் போலிங்கு
   சந்தமும் மோனையும் ஆகிடவே...

கவிதைக் குழந்தையை ஈன்றெடுத்தேன் !
    இன்பமாய் வேதனைப் பிரசவத்திலே !
புவியெலாம் அதைக்கண்டு சீராட்ட...
    பெருமிதம் கொண்டேன் பெற்றவனாய் !


Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates