.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, October 10, 2014

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !



சர்வம் சாய் மயம் என்ற எனது ஷீரடி சாய் பாபா மீதான பாடல்கள் அடங்கிய சி.டி.யில் இடம் பெற்ற எனது மற்றுமொரு பாடலுக்கான வரிகள்:



பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/ennai-soozhndirukkum-sai

 பல்லவி

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !
நெஞ்சில் ஆழ்ந்திருக்கும் சாயி !
என் நினைவெல்லாம் சாயி !
என் கனவெல்லாம் சாயி !
என் சர்வமும் சாயி மயம் !
என் சர்வமும் சாயி மயம் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

சரணம் 1

தனி தனி தனி தனியாக நான் போகும் போது...
துணை துணை துணை...துணையாக வந்திடுவான் !

பிணி பிணி பிணி பிணி என்னை பீடிககும் போது...
உதி உதி உதி உதி தந்து மீட்டிடுவான் !

காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழி காட்டுவான் !
காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழி காட்டுவான் !

காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !
காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

சரணம் 2

ஒரு ஒரு ஒரு ஒரு தரம் திருமுகம் பார்த்தால்
மறு மறு மறு மறு தரம் பார்க்கத் தூண்டும் !

குரு குரு குரு குருவாரம் விரதமி ருந்தால்...
திரு திரு திரு திருவாகும் வேண்டுதலே !

சாயிராமா என்று சொன்னால் சங்கடங்கள் தீருமே !
சாயிராமா என்று சொன்னால் சங்கடங்கள் தீருமே !

செல்வமுடன் சேர்ந்ததொரு சௌபாக்யம் கூடுமே !
செல்வமுடன் சேர்ந்ததொரு சௌபாக்யம்  கூடுமே !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

Wednesday, September 24, 2014

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?!

கருங்கூந்தல் மேகக் காரி !
   கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
பெரும்பங்குத் தலைமேல் ஏற...
   உலர்த்திடத்  தலைவிரித்தாளே !

தரையெலாம் சிதறியே விழுமாம்...
  தூரலாய் நீர்த்துளிக் கோர்வை !
"மழைத்துளி" என்றோர் பெயரில்...
    மண்ணிலே வருணன் பார்வை !

பூமியின் அடியில் தோன்றி...
   பூமிவாழ் உயிர்களுக் கெல்லாம்...
சாமிபோல் உதவிய நீர்க்கு...
   பூமிதான் பிறந்த வீ டாகும் !

விடுப்பிலே தாயின் வீடு
    திரும்பிடும் புதுப் பெண்போல‌
துடிப்பிலே 'சோ'-வெனக் கூவி
    'திபுதிபு' என மண்சேரும் !

நீரெனப் புவியில் ஓடி
   நலமுடன் வாழும் போதும்
ஊரெலாம் குளிர்ந்திட மழையாய்
    தரையிலே வீழ்ந்திடும் போதும்

புவியெலாம் வாழ்த்திடும் என்றும் !
   புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் !
கவிஞர்கள் பாடிடும் மழைதான் !
   சொல்லாமல் சொல்வது என்ன?

உலகெலாம் வாழ்த்திடும் வண்ணம்
   நடந்திடும் உன்னத‌ குணத்தாள்...
'சலசல' மழைத்துளி சொல்லும்
   சங்கதி புரிந்தே வாழ்வோம் !

Wednesday, September 17, 2014

பகிரப்பட்ட விருது !

திரு.யாழ்பாவாணன் அவர்கள், தனக்கு கிடைத்த விருதினை, பெருந்தன்மையுடன்  10 பதிவர்களுடன் பகிர்ந்துள்ளார் http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html. அந்த பத்து பேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறேன்.

அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.  அவர் பகிர்ந்த விருது இதோ...







நன்றிகள் பலவுடன்
பிரசாத்

Thursday, August 28, 2014

பிள்ளையார் - நண்பேண்டா !

என் மகன் பள்ளியில் பாடுவதற்காக, எழுதியது !




தொந்தி வெச்ச பிள்ளையாரு !
என்னுடைய நண்பேன்டா !
வந்து என்ன பாக்குறநீ
வந்த வழி திரும்புடா !
மந்திரத்த சொல்லிகிட்டு
மோதகத்தை படையல் செஞ்சேன் !
மோதகத்தை ஏத்துகிட்டு
சாதகமா நடந்துக்குவார் !

(தொந்தி வெச்ச)

அப்பா செல்லம் யாருடா?
சிங்கக் குட்டி நானடா !
எல்லாருக்கும் செல்லம் இங்கே
பிள்ளையாரு தானடா !

தப்பு ஏதும் செஞ்சுபுட்டா..
தோப்புக் கர்ணம் போட்டுபுட்டா
தப்பை எல்லாம் மறந்திடுவார்
தங்க பிள்ளையாருடா !

(தொந்தி வெச்ச)


Thursday, August 14, 2014

மங்கையராய் பிறப்பதற்கே...!





கருவிலே 'பெண்சிசு' என்றால்..
   கலைத்திட வழிகள் செயவார் !
உருவுடன் வெளியே வந்தால்...
   குப்பையில் தூக்கியே எறிவார் !

குப்பையில் கண்டெடுத் தவனும்
   கண்களை சிதைத்தே விடுவான் !
தப்பவே முடியா இடத்தில்...
   பிச்சையும் இரங்கிட வைப்பான் !

கன்னியாய் வளர்ந்தே நின்றால்
   காளையர் சேட்டைகள் செய்வார் !
பெண்மையை ருசித்துப் பார்த்து
    காட்சியில் மறைந்தே போவார்!

முதுமையில் வீட்டில் தனியே
   முழுமையாய் ஓய்வும் கொண்டால்
முதுகிலே கத்தி நுழைத்து...
    உயிரையும் மாய்த்தே போவார் !

'பெண்' என உலகில் பிறந்தால்
     ஒவ்வொரு பருவம் தனிலும்
எண்ணிலா துயரம் வாட்டும் !
      என்செயும் பெண்கள் கூட்டம்?

பெண்களே இல்லை என்றால்..
   பூமியே உய்வதும் இல்லை...
எண்ணியே பார்த்திட வேண்டும்..
  ஏளனம் செய்திடும் கூட்டம் !

ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டி (2014) க்காக எழுதப்பட்டது ...
============

"பெண் சுதந்திரம்" பற்றிய பேச்சுக்கள் இன்னும் பேச்சளவிலேயே உள்ளதும், அது ஒரு சபதமாக மூச்சினிலே கலக்காத நிலை தொடர்வதும், மிகவும் வேதனைக்குரியது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தினசரி செய்தியானது வருந்தத்தக்கது. பெண்கள் இனத்தயே அழித்து விடவேண்டும் என்ற நோக்கோடு வன்முறையாளர்கள் செயல்பட்டுவருவது போல் தோன்றுகிறது. இது கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியது.

Sunday, August 3, 2014

பிற தளங்களில்...

இணையத்தில் மற்ற தளங்களில் இடம் பெற்ற எனது படைப்புகள் :  

வல்லமை
அதீதம்


SoundCloud.com

"சந்தித்ததும் சிந்தித்ததும்" என்ற பெயரில் பதிவெழுதும் நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவில், என்னுடைய கவிதை:


போட்டியில் வென்றதற்கான அறிவிப்புகள் :

Saturday, August 2, 2014

பூவை

படத்துக்குப் பாட்டு -  ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது ...

கூந்தலில் சூடும் பூவை
   கூடையில் ஏந்திக் கொண்டு
பாந்தமாய் வளைந்தே நிற்கும்
   பூவைப்போல் தோன்றும் பூவை...
பார்வைதான் யாரைத் தேடும் ?
    பொங்குதே விழியில் நாணம் !
கோர்வையாய் வார்த்தைத் துளிகள்
    கவிதையின் சரமெனத் துள்ளும் !

"பூ"வெனக் கூவியே சென்ற‌
   வீதியின் கடைசி வீட்டில்...
"ஆ" வென சத்தம் எழுப்பி
   இவளது கவனம் ஈர்த்த...
மேலுடை அணியாக் காளை
   முகமது நினைவில் தோன்ற...
கால்களும் கோலம் போடும் !
    கனவிலே நெஞ்சம் ஓடும் !

"நேற்றுபோல் இன்றும் அவனே
   நேரிலே தோன்றிடு வானோ?
காற்றிலே பறந்தென் நெஞ்சம்
   காதலை மொழிபெயர்த் திடுமோ?"
என்றெலாம் எண்ணியே இவளும்
   இன்றைய ஊர்வலம் துவங்க...
"நன்றெலாம் நடக்கும்" எனநாம்
   நல்லதோர் வாழ்த்தும் சொல்வோம் !

 

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates