அலுவலகக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது 1st Runner Up
அகிம்சை என்கிற ஆயுதம் எடுத்து _ புது
அறவழி சென்று போரினைத் தொடுத்து
'மலர்ச்சி' எழுந்திட பெற்றது சுதந்திரம் ! _ நம்
'எழுச்சி வெல்லும்' என்பதே ம்ந்திரம் !
அறிவியல் துறையில் செயற்கை கோளும் _ பெரும்
ஆய்வியல் துறையில் கண்டுபிடிப் புகளும்..
பொறியியல் துறையில் கணிணியில் வேகம் _ புதுப்
பொலிவுடன் வளரும் பொருளா தாரம் !
கலைத் துறை கல்வி விளையாட் டிலுமே _ ஒரு
சரித்திரம் படைத்திட இளம்படை இருக்கு..
நிமிர்ந்த நன்னடை போட்டென் தோழா _ சொல்
எழுந்தது இந்தியா வல்லர சாகவே..!
Tuesday, August 26, 2008
Thursday, August 14, 2008
மரம் நடுவோம்
வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...
வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...
மரம் நடுவோம்...மழை பெறுவோம்...
மரம் நடுவோம் இப்போதே...
இன்றே நட்டால்தான்
எதிர்காலம் அப்போதே... (வீட்டுக்கு ஒரு மரம்)
காடுஅது செழித்தால்தான்
நாடுஅது செழித்திடும்
வீடு ஒன்று மரம் ஒன்று
என்ற்கொள்கை வேண்டுமே...
ஏடெடுத்து படிக்கும்புள்ள _
இன்றே வைநீ தென்னம்புள்ள...
தேடவேண்டாம் நாளைநீயும்
செல்வம் ரொம்ப அருகிலே....
(வீட்டுக்கு ஒரு மரம்)
மாரியது பெய்தால்தான்
காரியமே நடந்திடும்!
பாரிதனை உணர்ந்திடவே
காடுபல வேண்டுமே..
பயிர்த் தொழிலே உயிர்த்தொழிலாய்
ஊரெல்லாம் ஏத்துக்கணும்...!
வயிற்றறுப் பசி இல்லயெனும்
நெலமதன்னை காத்துக்கணும்...!
(வீட்டுக்கு ஒரு மரம்)
நாட்டுக்கு நல்லறம்...
வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...
மரம் நடுவோம்...மழை பெறுவோம்...
மரம் நடுவோம் இப்போதே...
இன்றே நட்டால்தான்
எதிர்காலம் அப்போதே... (வீட்டுக்கு ஒரு மரம்)
காடுஅது செழித்தால்தான்
நாடுஅது செழித்திடும்
வீடு ஒன்று மரம் ஒன்று
என்ற்கொள்கை வேண்டுமே...
ஏடெடுத்து படிக்கும்புள்ள _
இன்றே வைநீ தென்னம்புள்ள...
தேடவேண்டாம் நாளைநீயும்
செல்வம் ரொம்ப அருகிலே....
(வீட்டுக்கு ஒரு மரம்)
மாரியது பெய்தால்தான்
காரியமே நடந்திடும்!
பாரிதனை உணர்ந்திடவே
காடுபல வேண்டுமே..
பயிர்த் தொழிலே உயிர்த்தொழிலாய்
ஊரெல்லாம் ஏத்துக்கணும்...!
வயிற்றறுப் பசி இல்லயெனும்
நெலமதன்னை காத்துக்கணும்...!
(வீட்டுக்கு ஒரு மரம்)
Labels:
இயற்கை,
கவிதை,
சுற்றுசுழல்,
மரம்
Friday, August 8, 2008
திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 2
பாடல் சூழல்: காதல் பிரிவில் சோகம்
அன்பே வா_வென்றேன் வந்தாய் _ வந்து
இன்பங்கள் நீ தந்தாய்...(அன்பே)
வேகம் உண்டானபோதே ஒரு சோகம் உண்டாச்சு கண்ணே...
சோகம் உண்டாந்தாலே இந்த நெஞ்சம் ரெண்டாச்சு பெண்ணே !
புனிதமான் நம் காதல் வேள்வியில் தொல்லை வந்தது ஏனடி?
மனித ஜாதிக்கு நமது காதலின் ஆழம் புரியல தானடி...!
முள்ளில் விழுந்தது சேலையே _ அதில்
முள்ளைப் போடுதல் லீலையே !
(அன்பே)
நிலவு வீசும் இந் நேரம்..உன் அன்பன் நெஞ்சில் ஓர் பாரம்..
உலவும் என் நெஞ்சில் என்றும்... நம் நீக்கமில்லாத பந்தம்...
உடலில் தீயைத்தான் வைக்கலாம்...உயிரில் இல்லையடி பைங்கிளி..!!
கடலில் அலைகளும் ஓய்வதில்லையே...உண்மைக் காதலும் சாய்வதில்லையே...
கால நேரங்கள் மாறலாம் _ நம்
காதல் அது போல மாறுமா?
(அன்பே)
அன்பே வா_வென்றேன் வந்தாய் _ வந்து
இன்பங்கள் நீ தந்தாய்...(அன்பே)
வேகம் உண்டானபோதே ஒரு சோகம் உண்டாச்சு கண்ணே...
சோகம் உண்டாந்தாலே இந்த நெஞ்சம் ரெண்டாச்சு பெண்ணே !
புனிதமான் நம் காதல் வேள்வியில் தொல்லை வந்தது ஏனடி?
மனித ஜாதிக்கு நமது காதலின் ஆழம் புரியல தானடி...!
முள்ளில் விழுந்தது சேலையே _ அதில்
முள்ளைப் போடுதல் லீலையே !
(அன்பே)
நிலவு வீசும் இந் நேரம்..உன் அன்பன் நெஞ்சில் ஓர் பாரம்..
உலவும் என் நெஞ்சில் என்றும்... நம் நீக்கமில்லாத பந்தம்...
உடலில் தீயைத்தான் வைக்கலாம்...உயிரில் இல்லையடி பைங்கிளி..!!
கடலில் அலைகளும் ஓய்வதில்லையே...உண்மைக் காதலும் சாய்வதில்லையே...
கால நேரங்கள் மாறலாம் _ நம்
காதல் அது போல மாறுமா?
(அன்பே)
Subscribe to:
Posts (Atom)